பதிவு செய்த நாள்
13 மார்2017
23:59
பெங்களூரு : கார்ல்சன் ரெசிடார் ஓட்டல் நிறுவனம், இந்தியாவில், கூடுதலாக, 170 ஓட்டல்களை வாங்க முடிவு செய்துள்ளது.
ஓட்டல் துறையில் ஈடுபட்டு வரும், கார்ல்சன் ரெசிடார் நிறுவனத்துக்கு, 16 மாநிலங்களின் தலைநகர் உட்பட, 60 நகரங்களில், ஓட்டல்கள் உள்ளன. இந்நிறுவனம், புதிய ஓட்டல்களை, கர்நாடக மாநிலம், பெங்களூரில் துவக்கியுள்ளது.
இது குறித்து, அக்குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜ் ரானா கூறியதாவது: நிறுவனம், இந்தியாவில், 15 ஆண்டுகளாக, ஓட்டல் துறையில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, 84 ஓட்டல்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. பெங்களூரில், எங்களின் மூன்றாவது ஓட்டலை துவக்கி உள்ளோம். இது, கர்நாடகாவில், ஆறாவது ஓட்டலாகும். இந்தியாவில், ஓட்டல் துறைக்கு அதிக சந்தை வாய்ப்புள்ளது. தற்போது, ஓட்டல் துறையில், அமைப்பு சாராத நிறுவனங்களின் பங்கு, 70 சதவீதமாக உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில், கூடுதலாக, 170 ஓட்டல்களை தன்னுடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|