பதிவு செய்த நாள்
14 மார்2017
00:02
புதுடில்லி : பொது காப்பீட்டு நிறுவனங்கள், வரும் ஏப்ரல் முதல், வாகனம், மருத்துவம் உள்ளிட்ட, 10 துறைகளின் காப்பீட்டு பிரீமியத்தை, 10 – 15 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளன.
ஆயுள் சாரா பொது காப்பீட்டு துறை நிறுவனங்கள், புயல், வெள்ளம், தீ, விபத்து உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கு அதிக அளவில் இழப்பீடு தர வேண்டிய நெருக்கடியில் உள்ளன. இத்தகைய சூழலில், வங்கி வட்டி விகிதம் குறைந்துள்ளதால், பொது காப்பீட்டு நிறுவனங்களின், முதலீடுகள் மீதான வருவாயும் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவதாக கூறி, முக்கிய 10 துறைகளில், காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்த, பொது காப்பீட்டு நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.குறிப்பாக, மூன்றாம் நபர் மோட்டார் வாகன காப்பீடு, குழு மருத்துவ காப்பீடு ஆகியவற்றுக்கான பிரீமியம், ஏப்., 1 முதல் உயருகிறது.
இது குறித்து, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினரான பி.ஜே. ஜோசப் கூறுகையில், ‘‘பொது காப்பீட்டு நிறுவனங்களின் லாப வரம்பு வெகுவாக குறைந்து விட்டதால், அவை பிரீமியத்தை உயர்த்துவதில் ஆச்சரியமில்லை,’’ என்றார்.
இந்த வகையில், பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பை அளித்து வரும், வாகனம், ஆரோக்கியம், மருந்து, மின்சாரம், சிமென்ட் உள்ளிட்ட, 10 துறைகளுக்கான காப்பீட்டு பிரீமியம், 10 – 15 சதவீதம் உயர உள்ளது.
பொது காப்பீட்டு துறையில், முதலிடத்தில் உள்ள, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜி.சீனிவாசன் கூறியதாவது: பொது காப்பீட்டு திட்டங்களின் பிரீமியம் விகிதாச்சாரம், தாங்க முடியாத அளவிற்கு குறைந்து விட்டதால், அவற்றை மறுசீரமைக்க திட்டமிட்டு உள்ளோம்.வரும் நிதியாண்டில், தீ விபத்து, குழு மருத்துவம் போன்ற பிரிவுகளின் காப்பீட்டு பிரீமியம் உயரக்கூடும் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|