பதிவு செய்த நாள்
16 மார்2017
00:37
பீஜிங் : இந்திய வர்த்தக கலாசார அம்சங்களை வெளிப்படுத்தும் நோக்கில், ‘இந்தியா – சீனா வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாடு’ சீனாவில் உள்ள, ஜென்ஜியாங் நகரில் நடைபெற உள்ளது.
இது குறித்து, சீனாவின், ஷாங்காய் நகரில் உள்ள, இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய துாதரகம், ஜென்ஜியாங் அரசுடன் இணைந்து, ‘இந்தியா – சீனா வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாடு’ மற்றும் வர்த்தக கலாசார விழாவை, நடத்த உள்ளது. இது, மார்ச் 16ல் துவங்கி, ஒரு வாரம் நடைபெறும்.இதில், இந்திய நிறுவனங்களின், 30 தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாநாடு, ஜென்ஜியாங் நிறுவனங்களுக்கு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ், வங்கி, நிதி, ஸ்மார்ட் சிட்டி, மின்சாரம் போன்ற துறைகளில், பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும்.
கிழக்கு சீனாவில், முக்கிய தொழில் மையமாக, ஜென்ஜியாங் விளங்குகிறது. இங்கு, உயிரி தொழில்நுட்பம், மருந்து, விமானம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|