பதிவு செய்த நாள்
16 மார்2017
23:52
புதுடில்லி : உள்நாட்டு விமான நிறுவனங்களில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதே சமயம், அன்னிய விமான நிறுவனங்கள், இந்திய விமான நிறுவனங்களில், 49 சதவீத அளவிற்கே, அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், அந்நாட்டு அரசு நிதியத்துடன் இணைந்து, இந்திய விமான சேவையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள உள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு, உள்நாட்டு விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து, விமான போக்குவரத்து துறை இணைஅமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறுகையில், ‘‘ உள்நாட்டு விமான சேவையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு குறித்து, இதுவரை அதிகாரபூர்வ விண்ணப்பம் எதுவும் வரவில்லை. இருந்த போதிலும், இத்துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு குறித்து, உரிய கொள்கைகளை உருவாக்கும் பணியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|