இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு பின் ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சிஇந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு பின் ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சி ... எதிர்பார்ப்பை மீறி சரிந்த ரூபாய் மதிப்பு : 65.65 எதிர்பார்ப்பை மீறி சரிந்த ரூபாய் மதிப்பு : 65.65 ...
600 கோடி ரூபாயில் ‘டைஸ்’ திட்டம்; ஏப்., 1ல் அமல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2017
23:57

புதுடில்லி : மத்­திய அரசு, ஏற்­று­ம­திக்­கான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்த, 600 கோடி ரூபாய் ஒதுக்­கீட்­டில், ‘டைஸ்’ என்ற புதிய திட்­டத்தை அறி­மு­கப்­படுத்தி உள்ளது.
‘‘இதன் மூலம், ஏற்­று­மதி தொடர்­பான அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களில் உள்ள குறை­பா­டு­கள் கண்­ட­றி­யப்­பட்டு, தீர்வு காணப்­படும்,’’ என, இத்­திட்­டத்தை துவக்கி வைத்த, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர் நிர்­மலா சீதா­ராமன் தெரி­வித்­தார்.
அவர், மேலும் கூறி­ய­தாவது: ஏப்., 1 முதல், நடை­முறைக்கு வர உள்ள இத்­திட்­டத்­திற்­காக, அடுத்த மூன்று நிதி­யாண்­டு­களில், தலா, 200 கோடி ரூபாய் வீதம், 600 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­படும். மத்­திய, மாநில அர­சு­கள் இணைந்து, சம நிதி பங்­க­ளிப்­பு­டன், இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும். வட­கிழக்கு மாநி­லங்­க­ளுக்கு மட்­டும், 80 சத­வீத தொகையை, மத்­திய அரசு வழங்­கும்.தொழிற்­சா­லை­யில் இருந்து, துறை­மு­கம், விமான நிலை­யம் ஆகி­ய­வற்­றுக்கு சரக்­கு­களை அனுப்­பு­வ­தில் உள்ள, அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி குறை­பா­டு­கள் குறித்து, ஏற்­று­மதி நிறு­வ­னங்­க­ளி­டம் கருத்து கேட்­கப்­படும். அத­ன­டிப்­ப­டை­யில், ‘டைஸ்’ திட்­டத்­தின் கீழ், அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு, உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
குறிப்­பாக, சுங்­கச்­சா­வ­டி­கள், எல்­லை­யோர சந்­தை­கள், ஒருங்­கி­ணைந்த சுங்க வசூல் மையங்­கள், இணைப்பு சாலை வச­தி­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும்.ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, தற்­போது பல திட்­டங்­கள் நடை­மு­றை­யில் உள்ளன. அவற்­றில் இடம் பெறாத அம்­சங்­கள் அடை­யாளம் காணப்­பட்டு, ‘டைஸ்’ மூலம் நிறை­வேற்­றப்­படும். இத்­திட்­டத்­தின் கீழ் மேற்­கொள்­ளும் பணி­க­ளுக்கு அனு­மதி வழங்கி, கண்­கா­ணிக்­கும் பொறுப்பு, மத்­திய வர்த்­தக அமைச்­சக செய­லர் தலை­மை­யி­லான, அமைச்­ச­கங்­களின் அதி­கார குழு­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும்.
ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த தேவை­யான, அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­து­டன், அவற்றை நிர்­வ­கித்து, பரா­ம­ரிப்­ப­தற்­கான செலவை, பயன்­பாட்­டிற்­கான கட்­டண வசூல் மூலம் திரட்­டிக் கொள்ள, புதிய திட்­டத்­தில் வழி­வகை செய்­யப்­பட்டு உள்­ளது. உரிய தரச்­சான்­று­டன், பல்­வேறு சரக்­கு­களை விரை­வாக ஏற்­று­மதி செய்ய, புதிய திட்­டம் உத­வும். இவ்­வாறு அவர் கூறி­னார்.
3 நிதி­யாண்­டு­கள்:ஏற்­று­மதி மேம்­பாட்டு குழுக்­கள், சிறப்பு ஏற்­று­மதி மண்­டல ஆணை­யங்­கள், பொருள் வர்த்­தக வாரி­யங்­கள், அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட, தலைமை வர்த்­தக கூட்­ட­மைப்­பு­கள், ‘டைஸ்’ திட்­டத்­தில், நிதி­யு­தவி பெற்று, அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி திட்­டங்­களை, 2017 – 20 வரை­யி­லான, மூன்று நிதி­யாண்­டு­க­ளுக்­குள் மேற்­கொள்­ள­லாம். நிதி­யு­த­வி­யில், 5 சத­வீ­தத்தை, திட்ட ஆய்வு, மதிப்­பீடு, கண்­கா­ணிப்பு உள்­ளிட்ட பணி­களுக்கு பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­படும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)