60 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை : மைக்ரோமேக்ஸ் இலக்கு60 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை : மைக்ரோமேக்ஸ் இலக்கு ... உருக்கு ஏற்றுமதி 78 சதவீதம் உயர்வு உருக்கு ஏற்றுமதி 78 சதவீதம் உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளின் அதிரடி உயர்வு : 10 காரணங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2017
15:14

புதுடில்லி : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களில் அதிரடியாக உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளன. நிப்டி 9200 புள்ளிகளையும், சென்செக்ஸ் 29,000 புள்ளிகளையும் கடந்துள்ளன.
பங்குச்சந்தைகளின் அதிரடியாக இந்த தொடர் உயர்விற்கு 5 மாநில சட்டசபை தேர்தலில், குறிப்பாக உ.பி.,யில் பா.ஜ., பெற்ற அமோக வெற்றியே காரணமாக கூறப்படுகிறது. வெற்றியை தொடர்ந்து ஆளும் பா.ஜ., அரசு பல முக்கிய திட்டங்களின் கொண்டு வந்த மாற்றங்கள், சீர்திருத்தங்கள் ஆகியனவும் காரணமாக கூறப்படுகிறது.
பங்குச்சந்தைகளின் வரலாறு காணாத உயர்வுக்கான முக்கியமான 10 காரணங்கள் :
* ஜிஎஸ்டி - ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி.,யால் உள்நாட்டு மொத்த உற்பத்தியால் (ஜிடிபி) அதிக வரி வருவாய் கிடைக்கும். இதனால் இந்தியாவின் நிதிபற்றாக்குறை குறையும்.
* நேரடி மானிய பரிமாற்றம் (டிபிடி) - உரம், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கான மானியத்தை அரசே நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வருவதால் பொது விநியோக திட்டத்தில் உள்ள குறுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன. இதனால் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்கப்படுவதற்கு மாநில அரசே முழு பொறுப்பாகிறது.
* பொதுத்துறை வங்கிகள் மறுசீரமைப்பு : பொதுத்துறை வங்கிகள் மூலம் அரசின் மானியங்கள் வழங்கப்படுவதை கண்காணிக்க வங்கி பணி வாரியம் ஒன்றை அரசு அமைத்துள்ளது.
* மின்மானியம், கட்டண உயர்வு : மின் கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மானிய தொகையின் அளவு குறையும். இதனால் இந்தியாவின் நிதி பற்றாக்குறை வெகுவாகக் குறையும்.
* வாராக்கடன் : வாராக்கடனை வசூலிப்பதற்காக வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி பல்வேறு விதிகளை கொண்டுள்ளது. வாராக்கடன்களை வசூலிப்பதற்காக பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* எஸ்எல்ஆர் குறைப்பு : எஸ்எல்ஆர்., எனப்படும் வங்கிகளுக்கான குறைந்தபட்ச ரொக்க பண விகிதத்தை ரிசர்வ் வங்கி ஏற்கனவே குறைத்துள்ளது. ஜிடிபி மற்றும் பொது கடன் திட்டங்களால் அடுத்த 5 ஆண்டுகளில் எஸ்எல்ஆர் மேலும் குறையும்.
* பொதுத்துறை வங்கிகள் மறுசீரமைப்பு : பொதுத்துறை வங்கிகளை மறுசீரமைப்பு செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்தள்ளது. பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசு பங்குகளை 51 சதவீதத்திற்கும் கீழாக குறைத்து கொள்ளுதல்.
* தொழிலாளர் சீர்திருத்தம் : ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஏற்கனவே தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் செய்து, அமல்படுத்தி உள்ளன. தொழிலாளர்களுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக செலவுகளை குறைத்தல் மற்றும் பணியாளர்களை பணியமர்த்தல் உள்ளிட்ட தளர்வுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
* நில சீர்திருத்தங்கள் : எதிர்க்கட்சிகளின் அரசியல் எதிர்ப்பு காரணமாக 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அரசு கைவிட்டது. நில சீர்திருத்தங்கள் மாநில அரசுகள் மூலமே மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது. தமிழக அரசு ஏற்கனவே தனக்கான நிலம் கையப்படுத்தும் கொள்கையை கொண்டு வந்து, அமல்படுத்தி வருகிறது. ராஜஸ்தான் அரசும் இந்த முயற்சியில் இறங்கி உள்ளது.
* அதிகாரங்களை குறைத்தல் : அதிகாரத்தை மேம்படுத்துதல் மற்றும் முடிவு எடுத்தலை ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)