ஜப்­பா­னி­ய­ரு­டன் கூட்டு தொழில் தமி­ழக தொழி­ல­தி­பர்­கள்  ஆர்­வம்ஜப்­பா­னி­ய­ரு­டன் கூட்டு தொழில் தமி­ழக தொழி­ல­தி­பர்­கள் ஆர்­வம் ... ஆன்­லை­னில் உணவு பொருட்­கள் 3 நிறு­வ­னங்­கள் ஆர்­வம் ஆன்­லை­னில் உணவு பொருட்­கள் 3 நிறு­வ­னங்­கள் ஆர்­வம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தனி­யார் தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் லாபம் உயர்வு: ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2017
01:54

மும்பை:‘நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், தயாரிப்புத் துறையில், தனியார் நிறுவனங்களின் லாப வளர்ச்சி அதிகரித்துள்ளது’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன் விபரம்:நடப்பு நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள, 2,784 தனியார் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், நிதி சாரா துறையைச் சேர்ந்த, அந்நிறுவனங்களின் செலவினம் உயர்ந்துள்ள போதிலும், அவற்றின் லாப வளர்ச்சி அதிகரித்திருப்பது, தெரிய வந்துள்ளது. அவற்றின் நிகர லாபம், கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட, 24.6 சதவீதம் அதிகரித்து, 53 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதில், தயாரிப்புத் துறை நிறுவனங்களின் நிகர லாபம், இதே காலத்தில், 57.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 33,600 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே காலத்தில், தகவல் தொழில்நுட்பம் தவிர்த்து, இதர சேவைகள் துறையின் விற்பனை வளர்ச்சி, பின்னடைவை கண்டுள்ளது. இத்துறை, தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக, இத்தகைய நிலையை சந்தித்து வருகிறது.முந்தைய காலாண்டை விட, மதிப்பீட்டு காலாண்டில், தயாரிப்பு நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம் உயர்ந்துள்ளது. அதே சமயம், பல்வேறு துறைகளில் பணியாளர் செலவினங்கள் குறைந்துள்ளன.
மதிப்பீட்டு காலாண்டில், இரும்பு, உருக்கு, பெட்ரோலியம் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சிறப்பாக செயல்பட்டு உள்ளன. அதன் காரணமாக, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாப வளர்ச்சி அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)