பதிவு செய்த நாள்
02 ஏப்2017
04:29
ஐதராபாத்;கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த, ஆக்ட் பைபர்நெட் நிறுவனம், இன்டர்நெட் இணைப்புகள் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அடுத்த இரு ஆண்டுகளில், 1,000 – 1,200 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாலா மல்லாடி கூறியதாவது:நிறுவனம், கடந்த இரு ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக, மதிப்பிடப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக, நாடு முழுவதும் விரிவாக்க சேவையில் ஈடுபடவும், புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அடுத்த இரு ஆண்டுகளில், 1,000 – 1,200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்.
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், ஒரு ஜி.பி.எஸ்., வேகம் உடைய, ‘ஒயர்டு இன்டர்நெட் சேவை’ துவக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த சேவை, பல நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள நிறுவனத்தின் சேவைகளை மிக துரிதமாக பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|