பதிவு செய்த நாள்
02 ஏப்2017
04:30
புதுடில்லி;மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், கடந்த மார்ச்சில், 1.40 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, கடந்த மார்ச்சில், 7.7 சதவீதம் அதிகரித்து, 1,27,999 ஆக உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 1,18,895 ஆக இருந்தது.கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், மொத்த விற்பனை, 9.8 சதவீதம் உயர்ந்து, 14,29,248லிருந்து, 15,68,603 ஆக அதிகரித்துள்ளது. இது தான், நிறுவனத்தின் சிறந்த விற்பனை ஆண்டாகும். உள்நாட்டு விற்பனை, 10.7 சதவீதம் ஏற்றம் கண்டு, 14,44,541 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச்சில், சிறிய வகை ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார்கள் விற்பனை, 15.6 சதவீதம் குறைந்து, 30,973 ஆக உள்ளது. அதே சமயம், காம்பேக்ட் பிரிவைச் சேர்ந்த, சுவிப்ட், எஸ்டிலோ, டிசையர், பலேனோ மற்றும் இக்னிஸ் கார்கள் விற்பனை, 29.7 சதவீதம் உயர்ந்து, 60,699 ஆக உள்ளது.நிறுவனத்தின் ஏற்றுமதி, 12.6 சதவீதம் உயர்ந்து, 11,764 ஆக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|