கனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வுகனவு வீடு தேடலில் உதவும் இணைய ஆய்வு ... இந்­தி­யாவின் இணை­ய­தள பொரு­ளா­தாரம் 25,000 கோடி டால­ராக அதி­க­ரிக்கும் இந்­தி­யாவின் இணை­ய­தள பொரு­ளா­தாரம் 25,000 கோடி டால­ராக அதி­க­ரிக்கும் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
முத­லீட்­டா­ளர்­களின் முக்­கிய தருணம் இது: ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
07:45

கடந்த வாரம் சந்­தையைப் பொருத்­த­வரை உப்பு சப்­பில்­லாத வாரம் என்றே சொல்ல வேண்டும். குறிப்­பி­டும்­ப­டி­யான மாற்­றங்கள் ஒன்றும் இல்லை.
நிப்டி 9173ல் இருந்து, 9198 வரை நகர்ந்­தது. எப்.ஐ.ஐ., முத­லீடு சற்றே மந்­த­மாக காணப்­பட்­டது. வெறும் 755 கோடி ரூபாய்க்கு மட்­டுமே முத­லீடு செய்­தனர். டி.ஐ.ஐ., முத­லீடு வெறும் 48 கோடி ரூபாய்க்கு மட்­டுமே. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வலு­வ­டைந்து, டால­ருக்கு 64.28 ரூபாயில் முடிந்­தது. இடையில், அமெ­ரிக்கா, சிரியா நாட்டின் மீது தாக்­குதல் நடத்­திய செய்தி வந்தும் கூட, ரூபாயின் மதிப்பு குறை­ய­வில்லை. அன்று, மாலை ரூபாயின் மதிப்பு கூடியே செலா­வணி வர்த்­தகம் முடிந்­தது.ரிசர்வ் வங்கி கவர்னர், கடன் வட்­டி­வி­கி­தத்தில் மாற்றம் எதுவும் கொண்டு வர­வில்லை. இது எதிர்­பார்த்­த­துதான் என்­றாலும், அந்த கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட ஒரு முடிவு முக்­கி­ய­மா­னதும் பாராட்­டுக்­கு­ரி­யதும் ஆகும். வங்­கிகள் தங்கள் வச­முள்ள உபரி பணத்தை ரிசர்வ் வங்­கியில் தினமும் செலுத்­துவர். இதற்கு ரிசர்வ் வங்கி, வட்டி கொடுக்கும்.
அந்த பணத்தை, அவசர தேவை உள்ள பிற வங்­கிகள் ரிசர்வ் வங்­கி­யிடம் கட­னாகப் பெற்றுக் கொள்­ளலாம். இதற்கு வங்­கிகள் ரிசர்வ் வங்­கிக்கு வட்டி கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி கடன் வாங்கும் மற்றும் கொடுக்கும் வட்டி விகி­தங்­க­ளுக்கு இடையே இருந்த பர­வ­லான இடை­வெளி குறைக்­கப்­பட்­டுள்­ளது. முடிவின் சாராம்சம் கடன் கொடுக்கும் வங்­கி­க­ளுக்கு அதிக வட்டி; கடன் வாங்கும் வங்­கி­க­ளுக்கு வட்டி குறைப்பு. இதனால், வங்­கிகள் வச­முள்ள உபரி பணத்தை குறைத்து, பண­வீக்கம் ஏற்­ப­டு­வ­தையும் தவிர்த்து, கடன் கொடுக்க விரும்பும் வங்­கி­களின் தேவை­யையும் பூர்த்தி செய்ய ரிசர்வ் வங்­கியின் இந்த முடிவு வழி செய்யும். இந்த முடிவு, கவர்­னரின் கூர்­மை­யான முடி­வெ­டுக்கும் திறனின் வெளிப்­பா­டாகும்.சந்­தையில் பெரு­மு­த­லீ­டுகள் அதிகம் தென்­ப­டா­விட்­டாலும், சிறு நிறு­வன பங்கு வர்த்­தகம் ஓங்­கி­யது என்றே சொல்ல வேண்டும். சந்­தையில், தனி முத­லீட்­டா­ளர்கள் தொடர்ந்து சிறு நிறு­வன பங்­கு­களை வாங்கிக் குவித்­தனர். இதனால், சிறு நிறு­வன பங்­கு­களின் மதிப்பு பெரு­ம­ளவு கூடி­யது. கடந்த ஓரிரு ஆண்­டு­க­ளாக இந்த வகை­யான நிறு­வன பங்­கு­களில் மட்­டுமே
முத­லீடு செய்யும் முத­லீட்­டா­ளர்கள் அதி­க­ரித்­துள்­ளனர். முத­லீடு செய்ய விரும்­புவோர் மிக அதி­க­மாக இருப்­பினும், முத­லீட்­டுக்­கான வாய்ப்­புகள் மிகக்­கு­றைவு. இதனால், இந்த வகை பங்­கு­களின் மதிப்பு கிடு­கிடு ஏற்றம் கண்­டுள்­ளன. எப்­போதும், ஒரு பங்கின் விலை வேக­மாக ஏறும்­போது சந்­தையின் கவனம் அதன் மேல் விழு­வது இயற்கை. இதனால், அத்­த­கைய பங்கின் விலை மேலும் வேக­மாக ஏறக் கூடும். இதுவே, சிறு, குறு நிறு­வன பங்­கு­களில் சமீ­ப­கால போக்­காக தொடர்­கி­றது. இந்த போக்கு நிலை­யா­னதா என்­பதை ஆராயும் தருணம் வந்­து­விட்­டது என்றே தோன்­று­கி­றது. முத­லீட்­டா­ளர்கள் இந்­த­வகை முத­லீ­டு­களில் மிகக் கவ­ன­மாக இருக்க வேண்­டிய தருணம் இப்­போது நில­வு­கி­றது. குறிப்­பிட்ட பங்­கு­களின் மதிப்பு மிக அதி­க­மாக இருக்­கும்­போது அதில் வர்த்­த­கமும், விலையும் பெருகி, பெரு­வா­ரி­யான தனி முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்கும் போக்கு சந்­தையில் தொடர்­கி­றது.
சந்­தையில் நடக்கும் முத­லீட்டு தவ­று ­களை தவிர்ப்­பது ஒவ்­வொரு முத­லீட்­டா­ளரின் கடமை. தவ­று­களை உரிய தரு­ணத்தில் முறை­யாக அடை­யாளம் கண்டால் மட்­டுமே அவற்றை தவிர்க்க இயலும். அந்த வகையில், இது சந்­தையில் உள்ள ஒவ்­வொரு தனி முத­லீட்­டா­ள­ருக்கும் முக்­கிய தருணம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)