பதிவு செய்த நாள்
19 ஏப்2017
01:54
புதுடில்லி : வெளிநாடுகளில் இருந்து, கூடுதலாக சர்க்கரை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளிக்காது என, தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி, இரண்டு கோடி டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இது, முந்தைய பருவத்தில், 2.50 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது. உள்நாட்டில், சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து, ஐந்து லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு, வரி வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சர்க்கரை இறக்குமதி செய்வதற்கான அளவை, மத்திய அரசு அதிகரிக்காது என, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: ஜூன் மாதத்துக்குள், ஐந்து லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நடப்பு சர்க்கரை பருவம் துவங்கும் போது, சர்க்கரை கையிருப்பு, 34 லட்சம் டன்னாக இருந்தது. தற்போது, சர்க்கரை இருப்பு குறைவாக இருந்தாலும், தொடர்ந்து உற்பத்தி நடந்து வருகிறது. அதனால், உள்நாட்டில் பாதிப்பு ஏற்படாது என்பதால், கூடுதலாக சர்க்கரை இறக்குமதி செய்ய, மத்திய அரசு அனுமதிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|