பதிவு செய்த நாள்
20 ஏப்2017
00:08
புதுடில்லி : டாடா குழுமத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., எனப்படும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 6,608 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது, முந்தைய ஆண்டின், இதே காலாண்டை விட, 4.2 சதவீதம் அதிகமாகும். இதே கால ஒப்பீட்டில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 4.2 சதவீதம் உயர்ந்து, 29 ஆயிரத்து, 642 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த முழு நிதியாண்டில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் நிகர லாபம், 8.3 சதவீதம் உயர்ந்து, 26 ஆயிரத்து, 289 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 8.6 சதவீதம் அதிகரித்து, 1.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனம், அமெரிக்காவில் நிலவும் நெருக்கடி உள்ளிட்ட கடும் சவால்களுக்கு இடையிலும், கடந்த நிதியாண்டில், சிறப்பாக செயல்பட்டு உள்ளது. வரும் நிதியாண்டில், இதே போல் சிறப்பாக செயல்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|