பதிவு செய்த நாள்
01 மே2017
04:15
இந்த நிதியாண்டிற்கான வரி சேமிப்பு திட்டமிடலில் ஈடுபடும் போது, வரி சலுகையுடன், வரி இல்லா வருமானம் தரும் இந்த முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலிக்கலாம்.
முதலீட்டு வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, அவை தரும் பலன்களை பரிசீலிக்கும் போது, அவற்றின் மீதான வரி விதிப்பையும் கவனத்தில் கொள்வது அவசியம். வரி சேமிப்பிற்காக முதலீடு செய்யும் போதும், இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், வரி விதிப்பையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது, முதலீடு மீதான பலன் குறைவதை உணரலாம். முதலீட்டின் மீதான வரி விதிப்பு, முதலீட்டின் நீண்ட கால பலன் மீதும் தாக்கம் செலுத்தலாம். பொதுவாக, வரி சேமிப்புக்கு திட்டமிடும் போது, பலரும் தேசிய சேமிப்பு சான்றிதழ், மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம் மற்றும் வரி சேமிப்பிற்கான ஐந்தாண்டு வைப்பு நிதி உள்ளிட்ட, முதலீட்டு வாய்ப்புகளை நாடுகின்றனர்.
வரி விலக்குஇவை சேமிப்பை அளித்தாலும், இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம், ஒருவரின் வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அவரது வருமான வரி வரம்பிற்கு ஏற்ப வரிக்கு உட்பட்டது. ஆக, முதலீடு செய்யும் ஆண்டில் வரி சேமிப்புக்கு உதவினாலும், அதன்பின், முதலீடு காலம் வரை, இவற்றின் மீதான வருமானம் வரி சுமையை ஏற்படுத்தலாம்.முதலீடு மூலமான வருமானத்தை சேர்த்த பின், வருமானம், வருமான வரி வரம்பிற்கு உட்பட்டிருந்தால், வரி விதிப்பு இருக்காது.
உதாரணமாக, ஓய்வு பெற்ற ஒருவரின் வருமானம், லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், 3 லட்சம் வரை, அவருக்கு வரி விலக்கு வரம்பு இருப்பதால் வரி செலுத்த வேண்டாம். ஆனால், மாத சம்பளம் பெரும்பாலானோர், தங்கள் வரி வரம்பிற்கு ஏற்ப, முதலீட்டின் வருமானம் மீதும் வரி செலுத்தும் நிலை உண்டாகலாம். இத்தகைய முதலீட்டாளர்கள் வரிச்சலுகையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், வரி இல்லா வருமானமும் அளிக்கக் கூடிய முதலீட்டு வாய்ப்புகளை பரிசீலிப்பதே, பொருத்தமாக இருக்கும் என, வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முதலீடு மீதான வரி விதிப்பிற்கு ஏற்ப, முதலீட்டு சாதனங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில், அனைத்து கட்டங்களிலும் வரிச்சலுகை அளிக்கும் முதலீடுகள் இ – இ – இ அந்தஸ்துடன் அமைவதாக கருதப்படுகின்றன. அதாவது, முதலீடு மட்டுமின்றி, அதன் வருமானம் மீதும் வரிச்சலுகை அளிப்பவையாக இருக்கின்றன.
இ.எல்.எஸ்.எஸ்.,ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்ஸ் ஸ்கீம் (இ.எல்.எஸ்.எஸ்.,) மியூச்சுவல் பண்ட்களில் ஒரு வகை. வரி சேமிப்பிற்கான முதலீடாக, இவை முன்வைக்கப்படுகின்றன. இதன் முதலீடு, வருமான வரிச்சட்டம் 80 சி பிரிவின் கீழ் விலக்கிற்கு உரியது. இவை, 3 ஆண்டு லாக் இன் காலம் கொண்டவை. பெரும்பாலான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், இந்த வகை திட்டங்களை அளிக்கின்றன. இவற்றின் முதலீட்டு பலன் உறுதி அளிக்கப்பட்டது அல்ல. மாறாக, சந்தையின் ஏற்ற, இறக்கத்திற்கு உட்பட்டவை. இவற்றில், டிவிடெண்டு வாய்ப்பு அல்லது வளர்ச்சி வாய்ப்பு நிதிகளை தேர்வு செய்யலாம்.
இவை சம பங்கு சார்ந்தவை என்பதால், பெரும்பகுதி சம பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது. நீண்ட கால முதலீட்டு ஆதாயம் பூஜ்ஜியம் ஆகும்; டிவிடெண்டிற்கும் வரி கிடையாது. ஒருவர் தன் நிதி நிலை மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப, இந்த வகை திட்டங்களில் இருந்து தேர்வு செய்யலாம். லாக் இன் காலம் முடிந்த பின்னும் கூட, நீண்ட கால பலனை கொண்டு முதலீட்டை தொடர்வது சிறந்தது என, கருதப்படுகிறது.
பி.பி.எப்.,பல ஆண்டுகளாக, பி.பி.எப்., பிரபலமான சேமிப்பு வழியாக அமைந்துள்ளது. இதில் செய்யப்படும் முதலீட்டிற்கான பலன், அரசால் உறுதி அளிக்கப்படுவது. இதன் மீதான வருமானத்திற்கும் வரி விலக்கு உண்டு. பி.பி.எப்., மீதான வட்டி வருமானம் தற்போது, 7 சதவீதமாக இருக்கிறது. (காலாண்டு அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுகிறது). நீண்ட கால நோக்கில், பாதுகாப்பு அளிக்கும் முதலீடாக அமைகிறது. இது, 15 ஆண்டு காலம் கொண்டது. அதன்பின், 5 ஆண்டு அடிப்படையில் நீட்டித்துக் கொள்ளலாம். நிதியாண்டில் குறைந்தது, 500 ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதே போல, தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., முதலீடும் வரி விலக்கு கொண்டது.மேலும், யூலிப்கள் எனப்படும், யூனிட்களுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டங்கள், வழக்கமான காப்பீடு திட்டங்கள் மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் ஆகியவையும், வரிச்சலுகை கொண்ட வருமானத்தை அளிக்கின்றன.
வரி திட்டமிடலில் கவனிக்க வேண்டியவை* வரி விலக்கு அளிக்கும் சாதனங்கள் வரி இல்லா வருமானமும் கொண்டிருப்பது நல்லது* வட்டி வருமானம் மீதான வரி விதிப்பு, முதலீட்டின் பலனை குறைக்கும்* சரியான முதலீட்டு சாதனங்களை தேர்வு செய்வதன் மூலம், நல்ல பலன் பெறலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|