பதிவு செய்த நாள்
02 மே2017
08:07
புதுடில்லி : பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், 88 நிறுவனங்களின் வருவாய், கடந்த ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், 9.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.வங்கி, நிதி, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் தவிர்த்த, இந்நிறுவனங்களின் நிகர லாபம், மதிப்பீட்டு காலாண்டில், 5.6 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. செயல்பாட்டு லாப வரம்பு, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, அரை சதவீதம் அதிகரித்து, 22.3 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.அல்ட்ரா டெக் சிமென்ட், மாருதி சுசூகி உள்ளிட்ட சில நிறுவனங்களின், நான்காவது காலாண்டு முடிவுகள், சந்தை எதிர்பார்ப்பிற்கு ஏற்றார் போல இருந்தன.அதே சமயம், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த, டி.சி.எஸ்., – இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின், காலாண்டு வளர்ச்சியில் காணப்பட்ட தேக்க நிலை, சந்தையின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைந்தது.எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு வருவாய், சந்தை எதிர்பார்ப்பை மீறி, 20.5 சதவீதம்; நிகர லாபம், 6.6 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டுள்ளது.வரும் நாட்களில், பொறியியல் சாதனங்கள், சிமென்ட், கட்டுமானம், மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெரிய நிறுவனங்களின், காலாண்டு முடிவுகள் வர உள்ளன.மதிப்பீட்டு காலாண்டில், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீட்டில் உள்ள, 50 நிறுவனங்களின் வருவாய் மற்றும் நிகர லாபம், முறையே, 8.9 சதவீதம் மற்றும் 12.4 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|