பதிவு செய்த நாள்
03 மே2017
07:44
புதுடில்லி : முக்கிய துறைகள், கடந்த மார்ச் மாதத்தில், 5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.இந்தியாவில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை முக்கிய, எட்டு தொழில் துறைகளாக கருதப்படுகின்றன.ஒட்டுமொத்த தொழில் துறையில், முக்கிய துறைகளின் பங்கு, 38 சதவீதம் என்றளவில் உள்ளது. கடந்த மார்ச் மாதத்தில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 5 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில் குறைந்து இருந்தது.இதே மாதங்களில், நிலக்கரி உற்பத்தி, 2.5 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. உருக்கு உற்பத்தி, 7.8 சதவீதத்தில் இருந்து, 11 சதவீதமாக உயர்ந்துள்ளது. மின் உற்பத்தி, 5.9 சதவீதம்; கச்சா எண்ணெய், 0.9 சதவீதம்; இயற்கை எரிவாயு உற்பத்தி, 8.3 சதவீதமாகவும் உள்ளது. அதே சமயம், சிமென்ட் உற்பத்தி, 6.8 சதவீதமாகவும்; உரங்கள் உற்பத்தி, 0.8 சதவீதம்; பெட்ரோலியம் பொருட்கள் உற்பத்தி, 0.3 சதவீதமாகவும் குறைந்துள்ளன.கடந்த முழு நிதியாண்டில், முக்கிய துறைகள், 4.5 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளன. இது, அதற்கு முந்தைய ஆண்டில், 4 சதவீதமாக குறைந்துஇருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|