பதிவு செய்த நாள்
04 மே2017
07:38
புதுடில்லி : இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மூன்றாவது பெரிய நிறுவனமாக, ‘விப்ரோ’ விளங்குகிறது.இந்நிறுவனம், கடந்த, 20 ஆண்டுகளாக, சூரியகாந்தி பூவை, அதன் வணிகச் சின்னமாக பயன்படுத்தி வந்தது. இது, தற்போது மாற்றப்பட்டு, பல வண்ண புள்ளிகளுடன், நான்கு வட்டங்களை கொண்ட, புதிய சின்னம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி கூறியதாவது:உள்நாட்டில் ஆற்றலை அதிகரித்து, அதன் மூலம் சர்வதேச தரத்தில் சேவைகளை வழங்குவதை, புதிய சின்னம் குறிக்கிறது. இது, வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் நினைப்பதையும், செயல்படுத்துவதையும், காட்சி வடிவில் விளக்குகிறது. சின்னத்தில் உள்ள புள்ளிகள், நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் உள்ள இணைப்பை குறிக்கின்றன.பிரகாசமான வர்த்தக அடையாள சின்னம், உயர் தரமான டிஜிட்டல் சேவைகளை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை குறிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த, 1981ல், தகவல் தொழில்நுட்பத் துறையில் கால் பதித்த விப்ரோ, தற்போது, 1.70 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களுடன், மிகப்பெரிய நிறுவனமாக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|