பதிவு செய்த நாள்
04 மே2017
07:39
புதுடில்லி : பங்கு முதலீட்டாளர்கள் இடையே, ஒருமித்த கருத்து எட்டப்படாததால், ‘ஸ்நாப்டீல்’ நிறுவனத்தை விற்பனை செய்வதில் இழுபறி நீடிக்கிறது.ஸ்நாப்டீல், பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை, அதன் வலைதளம் மூலம், மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. டில்லியைச் சேர்ந்த, குனால் பஹல், ரோஹித் பன்சால் ஆகியோர், 2010ல், ஸ்நாப்டீல் நிறுவனத்தை துவக்கினர். கடும் போட்டிஅதில், ஜப்பானைச் சேர்ந்த, சாப்ட் பேங்க் உள்ளிட்ட பல நிறுவனங்கள், பெரும் தொகையை முதலீடு செய்தன. இதையடுத்து, இந்திய வலைதள சந்தையில், 650 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக, ஸ்நாப்டீல் உருவெடுத்தது.இந்நிலையில், ‘அமேசான், பிளிப்கார்ட்’ போன்ற நிறுவனங்களின் கடுமையான போட்டியை, ஸ்நாப்டீல் சந்தித்தது. அதை சமாளிக்க, அதிரடி சலுகைகள், தள்ளுபடிகள் போன்றவற்றை வழங்கியது. அத்துடன், ‘பிரீசார்ஜ்’ போன்ற, பிற துறை நிறுவனங்களை கையகப்படுத்துவதிலும், ஸ்நாப்டீல் ஆர்வம் காட்டியது. இது போன்ற காரணங்களால், ஸ்நாப்டீல் கடுமையான பொருளாதார சிக்கலை சந்திக்க நேர்ந்தது.இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கையால், ஏராளமானோர் வேலையிழந்தனர்; கையகப்படுத்திய சில நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டன. புதிய முதலீடுகளை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டு, ஸ்நாப்டீல் மதிப்பு, 150 கோடி டாலராக குறைந்தது.விற்பனைக்கு எதிர்ப்புஇந்நிலையில், ஸ்நாப்டீல் நிறுவனத்தை, பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இயக்குனர் குழு கூட்டத்தில், ஸ்நாப்டீல் மதிப்பு குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, அதில் முதலீடு செய்துள்ள கலாரி கேப்பிட்டல், நெக்சஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள், விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், சுமுக முடிவு எடுக்க முடியாமல் கூட்டம் கலைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|