பதிவு செய்த நாள்
13 மே2017
00:05
சென்னை அருகே, சிறு தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக, நான்கு மாடிகள் கொண்ட தொழில் வளாகம் அமைக்கும் பணிகளை, தமிழக அரசு துவங்கி உள்ளது.
இது குறித்து, தமிழக சிறு தொழில் துறையினர் கூறியதாவது: சென்னை பெருநகரை ஒட்டியுள்ள பகுதிகளில், தொழில் துவங்க போதுமான இடங்கள் இல்லை; நிலத்தின் மதிப்பும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால், கிண்டி, அம்பத்துார் போன்ற தொழிற்பேட்டைகளை விரிவுபடுத்த முடியவில்லை. எனவே, சிறு தொழில் முனைவோர் தொழில் துவங்க, இடம் தர முடியவில்லை; இடம் கிடைக்காமல், தொழில் முனைவோர் திணறுகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு, காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம் அருகே, திருமுடிவாக்கத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில், நான்கு அடுக்குமாடிகளுடன், தொழில் வளாகம் அமைக்க உள்ளோம். அங்கு, 1.5 ஏக்கர் பரப்பிலான இடத்தில், தலா, 1,000 சதுர அடி பரப்புடைய, 80 தொழிற்கூடங்கள் உருவாக்கப்படும். அவை, தகுதி அடிப்படையில், சிறு தொழில் முனைவருக்கு, குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படும். இந்த வளாகத்தை அமைக்க, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|