பதிவு செய்த நாள்
14 மே2017
02:15
மும்பை : டாடா குழும நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில், மொத்த வருவாயில், 2.8 சதவீத தொகையை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு செலவிட்டுள்ளன.டாடா குழும நிறுவனங்கள், மோட்டார் வாகனம், உருக்கு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றன. இக்குழும நிறுவனங்கள், சென்ற, 2016 – 17ம் நிதியாண்டில், 18,409 கோடி ரூபாயை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு செலவிட்டுள்ளன. இதன் மூலமாக கடந்த மூன்று ஆண்டுகளில், 100 கோடி டாலர் அளவுக்கு அவை பயனடைந்துள்ளன.இதுகுறித்து, டாடா சன்ஸ் தலைமை தொழில்நுட்ப அதிகாரி கோபிசந்த் கட்ராகாடா கூறியதாவது:எங்கள் குழுமம், மொத்த வருவாயில், சராசரியாக 2.5 முதல் 2.8 சதவீதம் அளவுக்கு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக செலவு செய்கிறோம். இதன் பயனாக, கடந்த மூன்று ஆண்டுகளில், 100 கோடி டாலர் அளவுக்கு பலனடைந்துள்ளோம். புதிய திட்டங்களுக்காக, அதிகளவில் நிறுவனம் செலவு செய்கிறது. டாடா நிறுவனம் இதுவரை, 3,300 புதுமைகளை அறிமுகம் செய்து, நடைமுறைப்படுத்தியுள்ளது. டாடா இன்னோவிஸ்டா நிகழ்ச்சிகள் மூலமாக புதுமை முயற்சிகளின் வளர்ச்சி, 110 சதவீதமாக உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|