பதிவு செய்த நாள்
17 மே2017
21:29
புதுடில்லி : நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 4,200 கோடி டாலராக அதிகரிக்கும் என, அதன் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி கூட்டமைப்பின் மண்டல தலைவர் அனில் சங்வால் கூறியதாவது: இந்தியாவில் இருந்து, பல நாடுகளுக்கு, நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2016 – 17ம் ஆண்டில், அவற்றின் ஏற்றுமதி மதிப்பு, 3,600 கோடி டாலர் என்றளவில் இருந்தது. தற்போது, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில், இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்களுக்கு, தேவை அதிகரித்து வருகிறது.
இதனால், நடப்பு நிதியாண்டில், ஆபரணங்கள் ஏற்றுமதி மதிப்பு, 4,200 கோடி டாலராக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ஆபரணங்களுக்கு முக்கிய சந்தையாக உள்ள, துபாயில், தங்கம் மற்றும் வைர ஆபரணங்களுக்கு, 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டு உள்ளது. அவற்றில் இருந்து ஏற்படும் பாதிப்புகளை தளர்த்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புதிய சந்தைகளுக்கும், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|