பதிவு செய்த நாள்
19 மே2017
02:20
புதுடில்லி : ஆந்திராவைச் சேர்ந்த, அபெக்ஸ் புரோசன் புட்ஸ் நிறுவனம், கடல் உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், உடனடியாக உண்ணக் கூடிய, கடல்சார் உணவு வகைகளை, உணவு நிறுவனங்கள், சில்லரை விற்பனை கடைகள், ரெஸ்டாரென்டுகள், கிளப்புகள் போன்றவற்றுக்கும் விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், புதிய இறால் பண்ணை அமைக்க திட்டமிட்டு உள்ளது.அத்துடன் வர்த்தக மேம்பாட்டு செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இத்திட்டங்களுக்கான நிதியை திரட்டிக் கொள்ளும் நோக்கில், இந்நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, விரைவில் பங்கு வெளியீட்டு தேதி, பங்கு விலை உள்ளிட்ட விபரங்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|