பதிவு செய்த நாள்
30 மே2017
05:57
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ஐ.ஓ.சி., நிறுவனம், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த நிதியாண்டில், 19,106 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இதன் மூலம், ஓ.என்.ஜி.சி., எனப்படும், ஆயில் அண்டு நேச்சுரல் காஸ் கார்ப்., நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் லாபகரமான நிறுவனமாக உருவெடுத்து உள்ளது.
கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், ஐ.ஓ.சி., நிகர லாபம், 70 சதவீதம் ஏற்றம் கண்டு, 19,106 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில், ஓ.என்.ஜி.சி., நிகர லாபம், 17,900 கோடி ரூபாயாக உள்ளது.முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, இந்தியாவின் மிக லாபகரமான நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில், 29,901 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது.
டி.சி.எஸ்., இதே காலத்தில், 26,357 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்று, இந்தியாவின் இரண்டாவது லாபகரமான நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. நீண்ட காலமாக, இந்தியாவின் மிகவும் லாபகரமான பொதுத் துறை நிறுவனமாக, ஓ.என்.ஜி.சி., முதலிடத்தில் இருந்து வந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|