பதிவு செய்த நாள்
02 ஜூன்2017
06:32
புதுடில்லி : பாரத் ரோடு நெட்வொர்க் மற்றும் எம்.ஏ.எஸ்., பைனான்ஷியல் நிறுவனம் ஆகியவற்றின் பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது.
எம்.ஏ.எஸ்., பைனான்ஷியல் சர்வீசஸ், வங்கி சாரா நிதி நிறுவனமாகும். இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 550 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு மேலாண்மை பணிகளை, மோதிலால் ஆஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாரத் ரோடு நெட்வொர்க், இந்தியாவில் நெடுஞ்சாலை திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. சாலைகள் அமைப்பது மட்டுமின்றி, அவற்றை செயல்படுத்துவது, பராமரிப்பது உள்ளிட்ட இதர பணிகளையும் செய்து வருகிறது. இந்நிறுவனம், கடன்களை திரும்ப செலுத்த, பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களும், பிப்., – மார்ச் மாதங்களில், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, ‘செபி’யிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்தன. தற்போது, அந்நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கான பணிகளை மேற்கொள்ள, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|