பதிவு செய்த நாள்
02 ஜூன்2017
06:32
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவது குறித்து, மத்திய அமைச்சரவைக் குழு விரைவில் முடிவெடுக்க உள்ளது.
கடந்த, 2007ல், சர்வதேச விமான சேவை நிறுவனமான, ஏர் இந்தியா உடன், உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டு வந்த, இந்தியன் ஏர்லைன்ஸ் இணைக்கப்பட்டது. அது முதல், ஏர் இந்தியா தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது.இதையடுத்து, முந்தைய, ஐ.மு., கூட்டணி அரசு, ஏர் இந்தியாவில் பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை செய்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. இருந்த போதிலும், இழப்பு தொடர்கதையாகி, தற்போது, 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, ஏர் இந்தியா கடனில் மூழ்கியுள்ளது.
கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில் மட்டும், பெட்ரோல் விலை சரிவாலும், பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பினாலும், ஏர் இந்தியா, செயல்பாட்டு லாபமாக, 105 கோடி ரூபாய் ஈட்டியது. இந்நிலையில், ஏர் இந்தியாவை மீண்டும் துாக்கி நிறுத்த, 30 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
‘தொடர்ந்து இழப்பை கண்டு வரும் ஏர் இந்தியாவிற்கு அளிக்கும் நிதியுதவியை, மத்திய அரசு, ஆரோக்கிய பராமரிப்பு, கல்வி போன்ற துறைகளுக்குச் செலவிடலாம். ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கலாம்’ என, சமீபத்தில், ‘நிடி ஆயோக்’ மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இந்த பரிந்துரை குறித்து, விரைவில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.
சி.பி.ஐ., வழக்கு:
முந்தைய, பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில், ஏர் இந்தியா, சில லாபகரமான வழித்தடங்களின் உரிமத்தை, திரும்ப ஒப்படைத்து, தனியார் விமான நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்து கொண்ட புகார் குறித்து, சி.பி.ஐ., மூன்று வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|