பதிவு செய்த நாள்
03 ஜூன்2017
01:20
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த ஐ.டி., துறை ஆய்வு நிறுவனமான கார்ட்னர், இந்தாண்டு, மத்திய அரசு, தகவல் தொழிற்நுட்ப துறைக்கான செலவினத்தை, 780 கோடி டாலர், அதாவது, 50,263 கோடி ரூபாயாக குறைத்துள்ளது.
கார்ட்னர், முன்னதாக, இச்செலவின வளர்ச்சி, 9.5 சதவீதமாக இருக்கும் என, தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை, அதை தொடர்ந்து, தொழில் துறை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவற்றால், மதிப்பீட்டை குறைத்துள்ளதாக, கார்ட்னர் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் வீடு திட்டம், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் ஒதுக்கீடு அதிகரிப்பு போன்றவற்றால், மத்திய அரசு, தகவல் தொழிற்நுட்பங்களுக்கு செலவிடுவது அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஆலோசனை, சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் உதவி, பி.பி.ஓ., உள்ளிட்ட, தகவல் தொழிற்நுட்ப சேவைகளுக்கான செலவினம், இந்தாண்டு, 10.8 சதவீதம் உயர்ந்து, 200 கோடி டாலரை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|