பதிவு செய்த நாள்
04 ஜூன்2017
02:09
புதுடில்லி, ஜூன் 4–மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்திடம், எம்.எஸ்.எம்.இ., எனப்படும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையைச் சேர்ந்த, ஏற்றுமதியாளர்கள், புதிய, ஜி.எஸ்.டி., வரியில், சில சலுகைகள் கோரி விண்ணப்பித்திருந்தனர்.அவற்றை வர்த்தக அமைச்சகம் பரிசீலித்து, ஆவன செய்யுமாறு, ஜி.எஸ்.டி., குழுவிற்கு அனுப்பியது.இது குறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவன ஏற்றுமதியாளர்கள், இறக்குமதி செய்யும் மூலப்பொருட்களுக்கான சுங்க வரியை, ஏற்றுமதியின் போது திரும்பப் பெற்று வருகின்றனர். இவர்கள், ஜூலையில் அறிமுகமாகும், ஜி.எஸ்.டி., வரியில், முன்கூட்டிய வரியால் செயல்பாட்டு மூலதனம் அதிகளவில் முடங்கும் எனக்கூறி, ஏற்றுமதிக்கு பின் வரியை செலுத்த சலுகை கோரினர். அதை ஏற்க, ஜி.எஸ்.டி., குழு மறுத்துவிட்டது. எனினும், ஏற்றுமதியாளர்களுக்கு திரும்பத் தரப்படும் சுங்க வரி திட்டத்தில், ஜி.எஸ்.டி.,யில் செலுத்திய வரியை சேர்த்து தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என, அக்குழு கூறியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|