பதிவு செய்த நாள்
04 ஜூன்2017
02:23
புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை, 1 முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால், இந்த புதிய வரி விதிப்புக்கு ஏற்ப, வணிக நிறுவனங்கள், அவற்றின் வரி தாக்கல் உள்ளிட்டவை தொடர்பான நடைமுறையை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய சாப்ட்வேர் தேர்வுகள் மற்றும் கணினி சார்ந்த செயல்பாடு களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள், அதிகளவில் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வணிக நிறுவனங்களில், ‘சேப், ஆரக்கிள்’ ஆகிய மென்பொருட்கள் சார்ந்த வர்த்தக நடைமுறைகளில், ஜி.எஸ்.டி., விதிமுறைகளுக்கு ஏற்ப, சில மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால், ஐ.டி., நிறுவனங்களுக்கு, 6,000 கோடி ரூபாய் அளவில் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும்.கிளியர் டாக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர்கித் குப்தா கூறுகையில், ‘‘ஜி.எஸ்.டி.,யால், சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் சார்ந்த சேவைகளுக்கு, 6,000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது,’’ என்றார்.இதுவரை, 80 லட்சம் வணிக நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.,க்கு பதிவு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|