பதிவு செய்த நாள்
04 ஜூன்2017
02:26
சென்னை : ‘ஐ.டி., துறையில், லட்சக்கணக்கானோர் வேலை இழப்பிற்கு ஆளாவர் என்பது, மிகைப்படுத்தப்பட்ட தகவல்’ என, இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.இந்நிறுவனங்கள், இந்தாண்டு, தலா, 20 ஆயிரம் பேர் வீதம், 40 ஆயிரம் பேரை பணிக்கு தேர்வு செய்ய உள்ளன. சமீபத்தில், ‘ஐ.டி., துறையில், ஆண்டுக்கு, 2 லட்சம் வீதம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 6 லட்சம் பேர் வேலை இழப்பர்’ என, தகவல் வெளியானது. அதற்கேற்ப, இன்போசிஸ், காக்னிஸன்ட், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில், ஆட்குறைப்பு நடைபெறுவதாக கூறப்பட்டது.இதையடுத்து, பீதியடைந்த, ஐ.டி., பணியாளர்கள், தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கி உள்ளனர்.இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, யு.பி.பிரவின் ராவ், மத்திய மின்னணு மற்றும் ஐ.டி., துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, டில்லியில் சந்தித்து பேசினார்.இதையடுத்து, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இன்போசிஸ் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை, பிரவின் ராவ் எடுத்துக் கூறினார். ஏற்கனவே, டாடா குழுமத்தைச் சேர்ந்த, டி.சி.எஸ்., நிறுவனம், கடந்த மூன்று ஆண்டுகளில், 2.50 லட்சம் பேரை பணியமர்த்தியதாகவும், இந்தாண்டு கூடுதலாக, 20 ஆயிரம் பேரை பணிக்கு தேர்வு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளது. இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்கள் தொடர்ந்து வல்லுனர்களை தேர்வு செய்து வருகின்றன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்நிலையில், டி.சி.எஸ்., நிறுவனத்தின், சென்னை பிரிவின் தலைமை அதிகாரியும், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவின் வளர்ச்சி பிரிவு தலைவருமான, ரவி விஸ்வநாதன் கூறியதாவது:ஒரு நிறுவனம், ‘லே ஆப்’ என அறிவித்தால், எந்த வேலையும் இல்லை என, அர்த்தம். அப்படிப்பட்ட வேலையில்லாத நிறுவனம், கூடுதல் பணியாளர்களை தேர்வு செய்யாது. ஐ.டி., துறையில் வேலையில்லை என்பதே இல்லை. அதுவும் குறிப்பாக, தற்போது, டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு, இயந்திரங்கள் இடையிலான இணைய பயன்பாடு போன்ற, புதிய தொழிற்நுட்பங்கள் பெருகி வருவதால், ஐ.டி., துறையில் வேலையிழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.‘இந்தாண்டு, ஐ.டி., துறை தான், அதிகபட்ச பணியாளர்களை நியமிக்கும்’ என, ‘நாஸ்காம்’ அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில், தொழிற்நுட்பத்திற்கான செலவினம் குறைய வாய்ப்பில்லை என்பதால், ஐ.டி.,சேவைகளும், அவற்றுக்கான வல்லுனர்களின் தேவையும் பெருகும்.இவ்வாறு அவர் கூறினார்.
மிகையான தகவல்ஐ.டி., துறை வேலையிழப்பு மிகைப்படுத்தி கூறப்படுகிறது. கடந்த ஆண்டு, இன்போசிஸ், 20 ஆயிரம் பேரை பணியில் சேர்த்தது. இந்தாண்டும், இதே அளவில் பணியாளர்கள் சேர்க்கப்படுவர். பணித்திறன் அடிப்படையில், ஆண்டுக்கு, 300 – 400 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவது, வழக்கமான நடைமுறை தான்.– யு.பி.பிரவின் ராவ்,சி.இ.ஓ., இன்போசிஸ்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|