பணி வாய்ப்பு நம்பிக்கை: தென்னிந்திய நிறுவனங்கள் முதலிடம்பணி வாய்ப்பு நம்பிக்கை: தென்னிந்திய நிறுவனங்கள் முதலிடம் ... புதிய ரூ.500 நோட்டு அறிமுகம் : புழக்கத்தில் உள்ளதும் செல்லும் புதிய ரூ.500 நோட்டு அறிமுகம் : புழக்கத்தில் உள்ளதும் செல்லும் ...
வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­தியை உயர்த்த மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம் அறி­வுரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2017
23:56

புதுடில்லி : ‘‘வேளாண் துறை நிறு­வ­னங்­கள், புதிய தொழிற்­நுட்­பங்­களை புகுத்தி, மதிப்பு கூட்­டப்­பட்ட வேளாண் பொருட்­களை உரு­வாக்கி, ஏற்­று­ம­தியை உயர்த்த வேண்­டும்,’’ என, மத்­திய வர்த்­தக அமைச்­சக செய­லர் ரீடா தியோ­தியா வலி­யு­றுத்தி உள்­ளார்.

வர்த்­தக அமைச்­ச­கத்­தின் கீழ் செயல்­படும், வேளாண் மற்­றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வுப் பொருட்­கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு ஆணை­யம், வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

இந்த ஆணை­யத்­தின் சார்­பில், டில்­லி­யில் நடை­பெற்ற விழா­வில், ரீடா தியோ­தியா மேலும் பேசி­ய­தா­வது: வேளாண் பொருட்­க­ளுக்­கான புதிய சந்­தை­களை, நாம் அடை­யா­ளம் காண வேண்­டும். இதன் மூலம், வேளாண் பொருட்­களை அதி­க­ள­வில், சர்­வ­தேச சந்­தைக்கு கொண்டு செல்ல முடி­யும். அத்­து­டன், வேளாண் பொருட்­களின் மதிப்­பை­யும் உயர்த்த வேண்­டும்.

தொழிற்நுட்பம்:
நாம் தற்­போது, மதிப்பு கூட்­டப்­ப­டாத வேளாண் பொருட்­க­ளையே, பெரும்­பான்­மை­யாக ஏற்­று­மதி செய்து வரு­கி­றோம். மதிப்பு கூட்­டப்­பட்ட வேளாண் பொருட்­களின் பங்கு, மிகக் குறை­வா­கவே உள்­ளது. இது, மிக­வும் கவலை அளிக்­கிறது. மிகச் சாதா­ர­ண­மான பதப்­ப­டுத்­தும் பணி­க­ளுக்கோ அல்­லது மதிப்பை கூட்­டு ­வ­தற்கோ தான், இந்­தி­யா­வில் இருந்து பெரும்­பான்­மை­யான வேளாண் பொருட்­கள், வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­ம­தி­யா­கின்றன. இந்த நிலையை மாற்றி, இந்­தி­யா­வி­லேயே வேளாண் பொருட்­களின் மதிப்பை கூட்ட, உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்.

அடுத்து, வேளாண் நிறு­வ­னங்­கள், தொழிற்­நுட்­பங்­களை மேம்­ப­டுத்­து­வ­தில் தனி கவ­னம் செலுத்த வேண்­டும். ஒரு­சில நிறு­வ­னங்­கள் மட்­டுமே, ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்­டிற்­காக, குறிப்­பி­டத்­தக்க முத­லீ­டு­களை மேற்­கொள்­கின்றன. புதிய தொழிற்­நுட்­பங்­களை புகுத்­து­வ­தன் மூலம், புதிய சந்­தை­களில் நுழைய முடி­யும். அது போல, சர்­வ­தேச வாடிக்­கை­யா­ளர்­களை இந்­தி­யா­வுக்கு வர­வ­ழைத்து, இங்கு பின்­பற்­றப்­படும் அனைத்து தரக் கட்­டுப்­பாட்டு நடை­மு­றை­க­ளை­யும் விளக்க வேண்­டும். இதன் மூலம், உள்­நாட்டு நிறு­வ­னங்­களின் வேளாண் பொருட்­க­ளுக்கு, புதிய சந்தை வாய்ப்­பு­கள் கிடைக்­கும்.

வேளாண் பொருட்­கள் உற்­பத்­தி­யா­கும் இடம், அதன் போக்­கு­வ­ரத்தை கண்­கா­ணிக்­கும் வசதி ஆகி­ய­வற்­றுக்கு, அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய சந்­தை­கள் மிகுந்த முக்­கி­யத்­து­வம் அளிக்­கின்றன. அதற்­கேற்ப நாம் தயா­ராக, ஏரா­ள­மான பணி­களை மேற்­கொள்ள வேண்­டும்.

இயற்கை வேளாண் பொருட்கள்:
இயற்கை வேளாண் பொருட்­கள் உற்­பத்­தி­யில் ஈடு­பட்டு, அதற்­கான சான்­று­டன், மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­களை ஏற்­று­மதி செய்­வ­தில், நிறு­வ­னங்­கள் அக்­கறை செலுத்த வேண்­டும்.உல­கெங்­கும், ரசா­யன கலப்­பற்ற உரம் மூலம் விளை­விக்­கப்­படும் இயற்கை வேளாண் பொருட்­க­ளுக்கு, வர­வேற்பு அதி­க­ரித்து வரு­கிறது. இதை, இந்­திய நிறு­வ­னங்­கள் சிறந்த முறை­யில் பயன்­ப­டுத்தி, ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்த வேண்­டும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

‛‛சர்­வ­தேச வேளாண் பொருட்­கள் ஏற்­று­மதி, 2015ல், 1.75 லட்­சம் டால­ராக இருந்­தது. இதில், இந்­தியா, ஏழா­வது இடத்­தில் உள்­ளது.’’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)