பதிவு செய்த நாள்
14 ஜூன்2017
23:49
பெங்களூரு : ‘கூகுள்’ இந்தியா நிறுவனத்தின், சந்தை தீர்வுகள் பிரிவின் இயக்குனர் ஷாலினி கிரிஷ் கூறியதாவது: சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சொந்தமாக வலைதளங்களை உருவாக்க, கூகுள் நிறுவனம் புதிய பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் சிறிய, நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் இலவசமாக, மிக எளிதான முறையில், தங்களுக்கான வலைதளத்தை அமைத்துக் கொள்ளலாம்.
இந்தியாவில், 40 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களில், 30 கோடி பேர், ஸ்மார்ட் போன்கள் மூலம் வலைதளங்களை பார்வையிடுகின்றனர். அதனால், சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களுக்கென, வலைதளத்தை அமைத்துக்கொள்வது, வியாபார வளர்ச்சிக்கு உதவும். அவர்கள்,வலைதளத்தை உருவாக்குவது கடினமானது, செலவு பிடிக்கக் கூடியது என, கருதுகின்றனர்.
அதற்கான தீர்வாகத்தான், 'Website With Google My Business' என்ற மொபைல் போன் சார்ந்த வலைதள பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ், ஹிந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில், இச்சேவையை பெறலாம். ஜனவரியில், சோதனை முயற்சியாக துவங்கப்பட்ட இத்திட்டத்தில், 1.20 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|