பதிவு செய்த நாள்
20 ஜூன்2017
00:32
பெங்களூரு : மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ரஷ்யாவைச் சேர்ந்த, ரோஸ்நெப்ட் நிறுவனம், சமீபத்தில், உள்நாட்டைச் சேர்ந்த, எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. இது, உலகளவில், எண்ணெய் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.
கடந்த நிதியாண்டில், இந்த இரு நிறுவனங்களும், இந்திய பெட்ரோல் சந்தையில், 1,300 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. இந்த கையகப்படுத்தும் நடவடிக்கையை தொடர்ந்து, ரோஸ்நெப்ட், நாடு முழுவதும், சில்லரை விற்பனை பெட்ரோல் மையங்களை, பெரியளவில் அமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து, பெட்ரோல் விற்பனை மையங்களை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 600 கோடி டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள், பாரம்பரிய மற்றும் மரபு சாரா எரிபொருள் துறையில் வர்த்தக வாய்ப்புகளை விரிவு படுத்துவது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|