பதிவு செய்த நாள்
05 ஜூலை2017
00:02
புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மூலம் கிடைத்துள்ள வரி ஆதாயத்தை, நுகர்வோருக்கு அளிக்கும் நோக்கில், நுகர்பொருட்கள் விலையை, தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடியாக குறைக்கத் துவங்கி உள்ளன.
பதஞ்சலி, ஐ.டி.சி., இந்துஸ்தான் லீவர், மாரிக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள், அவற்றின் நுகர்பொருட்கள் விலையை குறைத்து, முகவர்களுக்கு வினியோகித்து வருகின்றன.
இது குறித்து, மாரிக்கோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி விவேக் கார்வே கூறுகையில், ‘‘ஜி.எஸ்.டி., காரணமாக, எந்தெந்த பொருட்களுக்கு விலை குறைகிறதோ, அதை நுகர்வோருக்கு வழங்க துவங்கி உள்ளோம். குறைக்கப்பட்ட புதிய விலையில், பொருட்கள் சந்தையில் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்,’’ என்றார்.
இந்துஸ்தான் லீவர் நிறுவனம், 250 கிராம், ‘ரின்’ பார் சோப்பு விலையை, 18 ரூபாயில் இருந்து, 15 ரூபாயாக குறைத்துள்ளது. அத்துடன், 10 ரூபாய் விலை உள்ள, ‘சர்ப் எக்செல்’ பார் சோப்பு எடையை, 95 கிராமில் இருந்து, 105 கிராமாக அதிகரித்துள்ளது.
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘வரி குறைவால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் நுகர்வோருக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அது, பொருட்களின் விலையை குறைப்பது அல்லது அவற்றின் எடையை அதிகரிப்பது போன்றவையாக இருக்கும்’ என்றார்.
இதை தொடர்ந்து, மேலும் பல நுகர்பொருள் நிறுவனங்கள் விலையை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குளியல் சோப்பு, கேச பராமரிப்பு எண்ணெய், டிடெர்ஜன்ட் பவுடர், சோப்பு, டிஷ்யூ பேப்பர், நாப்கின் போன்ற அன்றாட பயன்பாட்டு பொருட் களுக்கு, 18 சதவீதத்திற்குள் வரி விதிப்பு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|