பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
00:59
புதுடில்லி : மத்திய அரசு, தயாரிப்புத் துறையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், புதிய தொழில் கொள்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஆறு குழுக்களை நியமித்துள்ளது. புதிய தொழில் கொள்கை குறித்து, அனைத்து தொழில் துறையினர், வணிகர்கள் உள்ளிட்டோர் ஆலோசனைகளை வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின், ‘மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா’ உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளின் அடிப்படையில், புதிய தொழில் கொள்கை உருவாக்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழிற்நுட்பம், உள்கட்டமைப்பு, அறிவுசார் சொத்துரிமை, சுலபமான தொழில் நடைமுறை, எதிர்கால வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், புதிய தொழில் கொள்கை தயாரிக்கப்பட்டு, வரும் செப்டம்பரில் வெளியிடப்படும் என, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|