பதிவு செய்த நாள்
06 ஜூலை2017
01:02
புதுடில்லி : ‘கை கடிகாரங்களுக்கு, ஜி.எஸ்.டி.,யில் அதிக வரி விதிக்கப்பட்டிருப்பதால், நாட்டில் கடத்தல் கடிகாரங்களின் விற்பனை அதிகரிக்கும்’ என, டாடா குழுமத்தைச் சேர்ந்த, டைட்டன் நிறுவனம், மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன் விபரம்: தற்போது, மத்திய அரசு, ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், கை கடிகாரங்களுக்கு, 28 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், கை கடிகாரத்துக்கு அதிக வரி விதிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. இத்தகைய வரி விதிப்பால், நாட்டில், கை கடிகாரங்கள் கடத்தப்படுவது அதிகரிக்கும். இதனால், அரசுக்கு வரி இழப்பு ஏற்படும். ஜி.எஸ்.டி.,யில் உள்ளீட்டு வரிச்சலுகை காரணமாக, கை கடிகாரங்கள் விலை தற்போது உயர வாய்ப்பில்லை.
ஏப்., – ஜூன் வரையிலான காலத்தில், நிறுவனத்தின் விற்பனை, 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. ஜூனில் நடைபெற்ற, ‘தங்க பரிவர்த்தனை திட்டம்’ மூலம் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்துள்ளது. நடப்பு, 2017 – ௧௮ம் நிதியாண்டில், இதுவரை, நிறுவனம், 11 ‘டைட்டன் ஐ பிளஸ்’ கடைகளை திறந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|