பதிவு செய்த நாள்
08 ஜூலை2017
02:41
ஐயா, நாங்கள் ஏற்றுமதி தொழில் மட்டுமே செய்து வருகிறோம். இந்தியாவில் விற்பனை கிடையாது. நாங்கள், ஜி.எஸ்.டி., எண் பெற வேண்டுமா?– விஸ்வநாதன், திருப்பூர்உங்கள் ஆண்டு விற்பனை, 20 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், ஜி.எஸ்.டி., பதிவு அவசியம். ஏற்றுமதி செய்யும் காரணத்தால், நீங்கள் உள்ளீட்டு வரிப் பயன் பெறலாம்.ஜி.எஸ்.டி., பதிவு இல்லாத கடைகளுக்கு, பொருட்களை சப்ளை செய்யலாமா? அப்படி செய்தால், செய்தவர்களுக்கு ஏதாவது பிரச்னை வருமா?– மாயவன், மதுரைஜி.எஸ்.டி., பதிவு இல்லாத நபர்களுக்கு வழங்கல் செய்வதால், எந்த பிரச்னையும் இல்லை. அவர்களிடமிருந்து நீங்கள் வசூலித்த, ஜி.எஸ்.டி., தொகையை, ரிட்டர்ன் தாக்கல் செய்து, அரசுக்கு செலுத்தினால் போதும்.தற்போது, ஒர்க்ஸ் கான்ட்ராக்ட் வரி பிடித்தமாக (டி.டி.எஸ்.,) 2 சதவீதம் பிடித்தம் செய்கிறோம். ஜி.எஸ்.டி.,யிலும், 2 சதவீதம் வரிப் பிடித்தம் செய்ய வேண்டுமா?– சரவணன், சென்னைஜி.எஸ்.டி., அமைப்பில், வரிப் பிடித்தம் முறை இல்லை.
நாங்கள், கல்லுாரி ஒன்றில் சிற்றுண்டி மையத்தை நடத்தி வருகிறோம். மாணவர்களுக்கு டீ மற்றும் காபி ஐந்து ரூபாய், தோசை ஒன்பது ரூபாய் என, கல்லுாரியில் நிர்ணயிக்கப்பட்ட விலையை, டோக்கன் முறையில் விற்பனை செய்கிறோம். மேற்காணும் தொகையில், 2 சதவீத, ‘வாட்’ வரியை, எங்கள் தொகையிலிருந்து கட்டி வருகிறோம். தற்போது, 12 சதவீதம் வரியை, மாணவர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டுமா? இல்லையெனில், இது எங்களுக்கு இழப்பு அல்லவா?– விஜயகுமார், வியாசர்பாடிஜி.எஸ்.டி., சட்டத்தில், வழங்கலுக்கு உபயோகித்த பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்திற்கும், முழுமையான உள்ளீட்டு பயன் இருப்பதால், நீங்கள் உங்களுடைய, ஜி.எஸ்.டி.,க்கு பின் வழங்கல் செலவை சரியாக கணித்து, அதற்கேற்ப பொருட்களின் விலையில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கலாம் அல்லது நீங்கள் கலவை வரி (காம்போசிஷன்) திட்டத்தை தேர்வு செய்யலாம்.
நாங்கள் சென்னையில் உணவகம் மற்றும் தங்கும் விடுதி நடத்தி வருகிறோம். வெளிமாநிலத்திலுள்ள நிறுவனங்களிலிருந்து, வியாபார நிமித்தமாக அதிகாரிகள் எங்கள் விடுதியில் தங்கும்போது நாங்கள் அவர்களின் நிறுவனங்களின் பெயரில் விலைப்பட்டியல் அளிக்கிறோம். அதில் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டுமா, அல்லது சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டுமா?
– மணிகண்டன், போரூர்உங்களின் விடுதி தமிழகத்திலுள்ள காரணத்தால், உங்களின் இத்தகைய வழங்கல் உள்மாநிலத்தின் வழங்கலாக கருதப்பட்டு, சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டும்.
நாங்கள், அகர்பத்தி வியாபாரம் செய்து வருகிறோம். அதற்கு தற்சமயம் வரியில்லை. ஆனால், ஜி.எஸ்.டி.,யில் 12 சதவீதம் வரி விதித்துள்ளனர். நாங்கள், கையிருப்பு சரக்கிற்கு, 2 சதவீதம், ‘வாட்’ கட்டி உள்ளோம். எங்களுக்கு, ஐ.டி.சி., கிடைக்குமா? கிடைத்தால் எவ்வளவு?
– சாந்தி ஏஜன்சீஸ், சென்னைநீங்கள் செலுத்திய, 2 சதவீத, ‘வாட்’ வரியை, உள்ளீட்டு பயனாக பெறலாம். அதற்கு, நீங்கள் பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.= ‘வாட்’ ரிட்டர்ன் தாக்கல், கடந்த ஆறு மாதங்களுக்கு செய்து இருக்க வேண்டும்= உள்ளீட்டு வரியை, வாட் ரிட்டர்னில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்= ஜி.எஸ்.டி., டிரான் 1 எனும் படிவத்தை, செப்., 30க்குள், மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்தால், நீங்கள் செலுத்திய, ‘வாட்’ வரியை, எஸ்.ஜி.எஸ்.டி.,க்கு நிகர் செய்து கொள்ளலாம்.ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரிஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்தினமலர்39, ஒயிட்ஸ் ரோடு சென்னை – 14.gstqa@dinamalar.in
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|