பதிவு செய்த நாள்
08 ஜூலை2017
02:42
புதுடில்லி:மத்திய அரசு, தங்க சேமிப்பு பத்திரங்களை, வரும், 10ம் தேதி வெளியிட உள்ளது. இது, நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது வெளியீடாகும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், குறிப்பிட்ட தபால் அலுவலகங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், எட்டு ஆண்டுகள் வரை, முதிர்வு காலம் கொண்ட தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
இவற்றில், 14ம் தேதி வரை முதலீடு செய்யலாம். ஜூலை, 28ல், முதலீட்டாளர்களுக்கு தங்க சேமிப்பு பத்திரங்கள் வழங்கப்படும். அதன்பின், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.ஒரு நிதியாண்டில், ஒருவர் ஒரு கிராம் முதல், 500 கிராம் வரை, தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டிற்கு, 2.50 சதவீதம் ஆண்டு வட்டி அடிப்படையில், அரையாண்டுக்கு ஒருமுறை வட்டித் தொகை வழங்கப்படும். முதிர்வு காலத்திற்கு பின், தங்கமாகவோ அல்லது மின்னணு ஆவண வடிவிலோ மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.மத்திய அரசு, இதுவரை எட்டு முறை தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிட்டு, 5,400 கோடி ரூபாய் திரட்டி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|