இன்போசிஸ் நிகர லாபம் ரூ.3,483 கோடியாக உயர்வுஇன்போசிஸ் நிகர லாபம் ரூ.3,483 கோடியாக உயர்வு ... குறு, சிறு நிறுவனங்கள் சரக்கு – சேவை வரியால் பயன் பெறலாம்: மத்திய அரசு வேண்டுகோள் குறு, சிறு நிறுவனங்கள் சரக்கு – சேவை வரியால் பயன் பெறலாம்: மத்திய அரசு ... ...
ஊட்டச்சத்து மருந்துகள் சந்தை 1,000 கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2017
00:50

மும்பை : ‘இந்­தி­யா­வின் ஊட்­டச்­சத்து மருந்­து­கள் சந்தை, 2022ல், 1,000 கோடி டால­ராக உய­ரும்’ என, எம்.ஆர்.எஸ்.எஸ்., இந்­தியா நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அதன் விப­ரம்: இந்­தி­யா­வில், ஊட்­டச்­சத்­துள்ள உண­வு­கள், பானங்­கள், மருந்­து­கள் ஆகி­ய­வற்­றுக்கு வர­வேற்பு அதி­க­ரித்து வரு­கிறது. தற்­போ­தைய பர­ப­ரப்­பான வாழ்க்கை பாணி கார­ண­மாக, தங்­க­ளின் ஆரோக்­கி­யம், உடல்­ந­லன் பாதிக்­கக் கூடாது என, மக்­கள் விரும்­பு­கின்­ற­னர். அத­னால், ஊட்­டச்­சத்து மருந்­து­கள், உண­வு­கள், பானங்­கள் ஆகி­ய­வற்றை எடுத்­துக் கொள்­கின்­ற­னர். அதி­க­ரித்து வரும் நடுத்­தர வர்க்­கத்­தைச் சேர்ந்த இளைய சமு­தா­யத்­தி­னர், வாழ்க்கை பாணி மாற்­றத்­தின் பாதிப்­பு­களில் இருந்து பாது­காத்­துக் கொள்ள, ஊட்­டச்­சத்து உண­வு­களை நாடு­கின்­ற­னர்.

இதன் மூலம், இதய நோய், நீரி­ழிவு, உடல் பரு­மன், ஒவ்­வாமை உள்­ளிட்ட பல்­வேறு நோய்­களில் இருந்து தற்­காத்து கொள்­கின்­ற­னர். ஆரோக்­கி­யத்தை பேணு­வ­தன் மூலம், இத்­த­கை­யோர் வாழ்­நாள் நீடிப்­ப­தும், ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது. இத­னால், வளர்ந்த மற்­றும் வள­ரும் நாடு­களில், 2020ல், அதிக வய­து­டை­யோர் எண்­ணிக்கை, 100 கோடி­யாக உய­ரும்; இந்­தி­யா­வின் ஊட்­டச்­சத்து மருந்­து­கள் சந்தை, 2022ல், 1,000 கோடி டால­ராக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

விலையை குறைக்க வேண்­டும்
உடல் ஆரோக்­கி­யத்­திற்­கான துணை உண­வு­கள், நுண்­ணுா­ட்­டச் சத்­து­கள், ஊட்­டச்­சத்து மருந்­து­கள், உண­வு­கள், பானங்­கள் ஆகி­ய­வற்றை, நடுத்­தர மற்­றும் உயர் நடுத்­தர வர்க்­கத்­தி­னர் தான், அதி­கம் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். இந்­தி­யா­வில், 43 சத­வீத குழந்­தை­கள் ஊட்­டச்­சத்து குறை­பாட்­டால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். இதை கருத்­தில் கொண்டு, ஊட்­டச்­சத்து உணவு தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், நியா­ய­மான விலையை நிர்­ண­யிக்க வேண்­டும்.– ஜே.பி.மீனாசெயலர், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)