பதிவு செய்த நாள்
15 ஜூலை2017
00:50
மும்பை : ‘இந்தியாவின் ஊட்டச்சத்து மருந்துகள் சந்தை, 2022ல், 1,000 கோடி டாலராக உயரும்’ என, எம்.ஆர்.எஸ்.எஸ்., இந்தியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்தியாவில், ஊட்டச்சத்துள்ள உணவுகள், பானங்கள், மருந்துகள் ஆகியவற்றுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போதைய பரபரப்பான வாழ்க்கை பாணி காரணமாக, தங்களின் ஆரோக்கியம், உடல்நலன் பாதிக்கக் கூடாது என, மக்கள் விரும்புகின்றனர். அதனால், ஊட்டச்சத்து மருந்துகள், உணவுகள், பானங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்கின்றனர். அதிகரித்து வரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைய சமுதாயத்தினர், வாழ்க்கை பாணி மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, ஊட்டச்சத்து உணவுகளை நாடுகின்றனர்.
இதன் மூலம், இதய நோய், நீரிழிவு, உடல் பருமன், ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்து கொள்கின்றனர். ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம், இத்தகையோர் வாழ்நாள் நீடிப்பதும், ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில், 2020ல், அதிக வயதுடையோர் எண்ணிக்கை, 100 கோடியாக உயரும்; இந்தியாவின் ஊட்டச்சத்து மருந்துகள் சந்தை, 2022ல், 1,000 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விலையை குறைக்க வேண்டும்
உடல் ஆரோக்கியத்திற்கான துணை உணவுகள், நுண்ணுாட்டச் சத்துகள், ஊட்டச்சத்து மருந்துகள், உணவுகள், பானங்கள் ஆகியவற்றை, நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் தான், அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில், 43 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை கருத்தில் கொண்டு, ஊட்டச்சத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள், நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும்.– ஜே.பி.மீனாசெயலர், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|