பதிவு செய்த நாள்
29 ஜூலை2017
06:30
மும்பை: ‘‘வரும், 2022ல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியை, தற்போதைய, 4,300 கோடி டாலரில் இருந்து, 6,000 கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,’’ என, மத்திய வர்த்தக துறை இணை செயலர் மனோஜ் திவிவேதி தெரிவித்து உள்ளார்.
அவர், மும்பையில், சர்வதேச நகை கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது: நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை மட்டுமே, நாடு முழுவதும் அதிகபட்சமாக, அதிக திறனுள்ள மற்றும் திறன் தேவைப்படாத வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. ஆகவே, இத்துறையை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு கொள்கை திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக, சர்வதேச சந்தையில், இதர நாடுகளின் ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில், இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நகைகள் மற்றும் வைரங்களுக்கு, புதிய சந்தைகளை கண்டறியும் பணியில், அரசு ஈடுபட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், சர்வதேச சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், இந்திய ஆபரணங்கள் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 4,000 கோடி டாலரை தாண்டி உள்ளது. சர்வதேச நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையில், முதலிடம் பிடிக்க, ‘விஷன் – 2022’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், 2022ல், ஏற்றுமதியை, 6,000 கோடி டாலராகவும், 2025ல், 8,000 கோடி டாலராகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு ஏற்றுமதியை, 10 சதவீதம் அதிகரித்து, 4,700 கோடி டாலராக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம்.
– பிரவீன்சங்கர் பாண்டியா, தலைவர், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|