பதிவு செய்த நாள்
30 ஜூலை2017
01:27
புதுடில்லி : ‘‘டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பெருகி வருவதால், அடுத்த மூன்று ஆண்டுகளில், நிதி தொழிற்நுட்ப மென்பொருள் சேவைகள் சந்தை, 1,400 கோடி டாலராக உயரும்,’’ என, ‘நிடி ஆயோக்’ தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:தற்போது, 600க்கும் மேற்பட்ட, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடன், பணப் பட்டுவாடா, காப்பீடு, வர்த்தகம் உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, இவ்வகை நிறுவனங்களின், நிதி தொழிற்நுட்ப மென்பொருட்களின் பயன்பாடும் பெருகி வருகிறது. அதனால், இச்சந்தை மதிப்பு, தற்போதைய, 800 கோடி டாலரில் இருந்து, 2020ல், 1,400 கோடி டாலராகஉயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2016 – 17ம் நிதியாண்டில், ‘டிஜிட்டல்’ பணப் பரிவர்த்தனை, 55 சதவீதம் அதிகரித்துள்ளது.மேலும், ‘டெபிட் கார்டு’ பயன்பாடு, 104 சதவீதம் உயர்ந்து உள்ளது. ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும், பி.ஓ.எஸ்., கருவிகளின் பயன்பாடு, 83 சதவீதம் அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில், நிதி தொழிற்நுட்ப சந்தையில், ‘டாப் – 10’ பட்டியலில், இந்தியா உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|