பதிவு செய்த நாள்
19 ஆக2017
07:27
புதுடில்லி : பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அதன் சந்தாதாரர்கள் எளிய முறையில் பணம் செலுத்துவதற்கு, ‘மொபிக்விக்’ நிறுவனத்துடன் இணைந்து, ‘இ – வாலட்’ சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தலைவர், அனுபம் ஸ்ரீவத்சவா கூறியதாவது: பி.எஸ்.என்.எல்., சந்தாதாரர்கள், ‘ஆன்லைன்’ மூலம், மிக சுலபமாக பணம் செலுத்துவதற்கு, ‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பை சேவையில் ஈடுபட்டுள்ள, ‘மொபிக்விக்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளோம்.
இதன் மூலம், நிறுவனத்தின், 10 கோடி சந்தாதாரர்கள், ‘மொபிக்விக்’ வாயிலாக, ஆன்லைனில் பணம் செலுத்துதல், ரீ – சார்ஜ் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். இந்த வசதியை, ஸ்மார்ட் போன் மற்றும் பியூச்சர் போன்களில் பெறலாம். இதனால், கிராமப் புறங்களிலும், நிறுவனத்தின் தொலை தொடர்பு சேவைக்கு, சந்தாதாரர்கள் சுலபமாக பணம் செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|