பதிவு செய்த நாள்
28 ஆக2017
07:23
நிலையற்ற வருமானம், வேலைவாய்ப்பு தொடர்பான கவலை இந்தியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனமான பிர்லா சன்லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், பாதுகாப்பு சர்வேவை நடத்தியுள்ளது. இதில், 33 சதவீதம் பேர், நிலையற்ற வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 2013 நடத்தப்பட்ட ஆய்வில் இது, 12 சதவீதமாக மட்டும் இருந்தது. அப்போது, அதிகரிக்கும் விலைவாசி பற்றி அதிகமானோர் கவலை தெரிவித்திருந்தனர்.
வருமானத்திற்கு அடுத்த இடத்தில் அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் இடம்பெற்றுள்ளன. 22 சதவீதம் பேர் இது குறித்து அதிக கவலை தெரிவித்துள்ளனர். ஆயுள் காப்பீட்டின் தேவை உணர்ந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 60 சதவீதம் பேர் காப்பீடு பெற உத்தேசித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஓய்வு கால திட்டமிடல் தொடர்பான விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. 46 சதவீதம் பேர் சம்பாதிக்கும் போதே ஓய்வு கால திட்டமிடலை மேற்கொள்வதன் அவசியத்தை உணர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். பலர் தங்கள் வருமானத்தில் கணிசமான பகுதியை சேமித்து முதலீடும் செய்தும் வருகின்றனர். 44 சதவீதம் பேர், 25 சதவீத ஊதியத்தை சேமிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|