பதிவு செய்த நாள்
03 செப்2017
06:00
மும்பை : ‘‘சில்லரை வியாபாரிகளின் பதுக்கல் காரணமாகவே, சர்க்கரை விலை உயர்ந்துள்ளது,’’ என, மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை இணையமைச்சர், சி.ஆர்.சவுத்ரி குற்றஞ்சாட்டி உள்ளார்.அவர், மும்பையில் நடைபெற்ற, இந்திய சர்க்கரை வணிகர்கள் கூட்டமைப்பின் மாநாட்டில், மேலும் பேசியதாவது:நாட்டின் சர்க்கரை துறையை, ஏற்றுமதி சார்ந்த துறையாக மாற்ற, அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது. கரும்புக்கு உரிய விலையை விவசாயிகள் பெறவும், அவர்களுக்கான நிலுவையை, சர்க்கரை ஆலைகள் உடனடியாக வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கரும்புக்கு உரிய விலை கிடைத்தால், விவசாயிகள்வேறு பயிருக்கு மாற மாட்டார்கள். கடந்த பருவத்தில், கரும்பு விவசாயிகள் பலர், அதிக விலை கிடைக்கும் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளின் சாகுபடிக்கு மாறினர். அது போன்ற நிலை, இனி ஏற்படாத வண்ணம், சர்க்கரை இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்க, அரசு விரும்புகிறது.விவசாயிகள், கரும்பு உற்பத்திக்கு உரிய விலையை பெற வேண்டும்; சர்க்கரை ஆலைகள் நியாயமான லாபத்தில் இயங்க வேண்டும்; மக்கள் வாங்கக் கூடிய விலையில், சந்தையில் சர்க்கரை விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற மூன்று முக்கிய நோக்கங்களில், அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.மொத்த விற்பனையில், ஒரு கிலோ சர்க்கரை, 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், சில்லரை விற்பனையில், 44 ரூபாய்க்கு தான் கிடைக்கிறது. இந்த விலை வித்தியாசம் மிக அதிகம். இதற்கு, சில்லரை வியாபாரிகள் தான் காரணம். அவர்கள், சர்க்கரை மூட்டைகளை பதுக்கி வைக்கின்றனர்; சந்தைக்கு போதுமான சர்க்கரையை அனுப்புவதில்லை. இதன் காரணமாகவே, சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. இதை தடுக்கவே, நடப்பு செப்., – அக்., மாதங்களுக்கான சர்க்கரை கையிருப்புக்கு, அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|