4 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி4 அன்னிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அனுமதி ... ஏற்றுமதிக்கு, ‘இ – வாலட்’ வசதி மத்திய அரசு பரிசீலனை ஏற்றுமதிக்கு, ‘இ – வாலட்’ வசதி மத்திய அரசு பரிசீலனை ...
‘சில்லரை வியாபாரிகளால் சர்க்கரை விலை உயர்வு’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2017
06:00

மும்பை : ‘‘சில்­லரை வியா­பா­ரி­களின் பதுக்­கல் கார­ண­மா­கவே, சர்க்­கரை விலை உயர்ந்­துள்­ளது,’’ என, மத்­திய உணவு மற்­றும் பொது வினி­யோக துறை இணை­ய­மைச்­சர், சி.ஆர்.சவுத்ரி குற்­றஞ்­சாட்டி உள்­ளார்.அவர், மும்­பை­யில் நடை­பெற்ற, இந்­திய சர்க்­கரை வணி­கர்­கள் கூட்­ட­மைப்­பின் மாநாட்­டில், மேலும் பேசி­ய­தா­வது:நாட்டின் சர்க்­கரை துறையை, ஏற்­று­மதி சார்ந்த துறை­யாக மாற்ற, அரசு முயற்சி மேற்­கொண்டு உள்­ளது. கரும்­புக்கு உரிய விலையை விவ­சா­யி­கள் பெற­வும், அவர்­க­ளுக்­கான நிலு­வையை, சர்க்­கரை ஆலை­கள் உட­ன­டி­யாக வழங்­க­வும், நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.கரும்­புக்கு உரிய விலை கிடைத்­தால், விவ­சா­யி­கள்வேறு பயி­ருக்கு மாற மாட்­டார்­கள். கடந்த பரு­வத்­தில், கரும்பு விவ­சா­யி­கள் பலர், அதிக விலை கிடைக்­கும் எண்­ணெய் வித்­துக்­கள், பருப்பு வகை­களின் சாகு­ப­டிக்கு மாறி­னர். அது போன்ற நிலை, இனி ஏற்­ப­டாத வண்­ணம், சர்க்­கரை இறக்­கு­ம­தியை குறைத்து, ஏற்­று­ம­திக்கு ஊக்­க­ம­ளிக்க, அரசு விரும்­பு­கிறது.விவ­சா­யி­கள், கரும்பு உற்­பத்­திக்கு உரிய விலையை பெற வேண்­டும்; சர்க்­கரை ஆலை­கள் நியா­ய­மான லாபத்­தில் இயங்க வேண்­டும்; மக்­கள் வாங்­கக் கூடிய விலை­யில், சந்­தை­யில் சர்க்­கரை விற்­பனை செய்­யப்­பட வேண்­டும் என்ற மூன்று முக்­கிய நோக்­கங்­களில், அரசு தீவிர கவ­னம் செலுத்தி வரு­கிறது.மொத்த விற்­ப­னை­யில், ஒரு கிலோ சர்க்­கரை, 35 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது. ஆனால், சில்­லரை விற்­ப­னை­யில், 44 ரூபாய்க்கு தான் கிடைக்­கிறது. இந்த விலை வித்­தி­யா­சம் மிக அதி­கம். இதற்கு, சில்­லரை வியா­பா­ரி­கள் தான் கார­ணம். அவர்­கள், சர்க்­கரை மூட்­டை­களை பதுக்கி வைக்­கின்­ற­னர்; சந்­தைக்கு போது­மான சர்க்­க­ரையை அனுப்­பு­வ­தில்லை. இதன் கார­ண­மா­கவே, சர்க்­கரை விலை உயர்ந்­துள்­ளது. இதை தடுக்­கவே, நடப்பு செப்., – அக்., மாதங்­க­ளுக்­கான சர்க்­கரை கையி­ருப்­புக்கு, அரசு கட்­டுப்­பாடு விதித்­துள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)