பதிவு செய்த நாள்
10 செப்2017
03:18
புதுடில்லி : இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பவன் அகர்வால் கூறியதாவது:இந்தியாவில், அரசு நிர்வாகத்தில், 90 உணவு ஆய்வுக் கூடங்கள் உள்ளன. இதுதவிர, 135 ஆய்வகங்களை தனியார் நடத்துகிறது. மக்களுக்கு, பாதுகாப்பான, கலப்படமற்ற உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதே, ஆணையத்தின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, உணவு ஆய்வுக் கூடங்களை நவீனமயமாக்கும் பணிகள் நடக்கின்றன.உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, மாநில அரசுகளிடம் உள்ளது. உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில் உள்ள பலர், உணவு ஆய்வு என்ற பெயரில், அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாகின்றனர்.இதை தவிர்க்க, வெளிப்படையான ஆய்வு திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தில், வலைதளம் மூலம், தொழில்நுட்ப உதவியுடன், உணவின் பாதுகாப்பு மற்றும் மாதிரிகளை ஆய்வு செய்யலாம்.உணவு பாதுகாப்பு தொடர்பாக, ஒளிவுமறைவற்ற, வெளிப்படையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு, இந்த புதிய திட்டம் துணை புரியும். இதற்கு, மாநில உணவு பொருட்கள் துறை ஆணையர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். விரைவில், இத்திட்டம் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|