பதிவு செய்த நாள்
19 செப்2017
05:09
பெங்களூரு : ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின், மூத்த துணைத் தலைவரான, சஞ்சய் ராஜகோபாலன், பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி வகித்த, விஷால் சிக்கா, கடந்த மாதம், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, முக்கிய பதவியில் இருந்த சஞ்சய் ராஜகோபாலன், இப்போது ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து, ‘லிங்க்டு இன்’ சமூக வலைதளத்தில், ராஜகோபாலன், ‘இனி, தான் ஒரு சுதந்திர மனிதன்’ என, குறிப்பிட்டு உள்ளார். ராஜகோபாலன், 2014 ஆக., – 2017 செப்., வரை, இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். விஷால் சிக்கா, தன் பதவியை ராஜினாமா செய்த உடனேயே, ராஜகோபாலனும் ராஜினாமா செய்யக் கூடும் என, பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
காரணம், ராஜகோபாலன், விஷால் சிக்காவால் அழைத்து வரப்பட்டவர் என்பது தான். ஜூலையில், நிதி மேலாண்மை இயக்குனராக இருந்த, யூசுப் பஷீர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. ராஜகோபாலன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ‘மிக முக்கிய நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களை தவிர்த்து, மற்றவர்களின் சேர்க்கை அல்லது வெளியேற்றம் குறித்து, எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை’ என, இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|