பதிவு செய்த நாள்
02 அக்2017
01:04
இந்திய பங்குச் சந்தைகள், கடந்த வாரம், சரிவில் முடிவடைந்தன. தேசிய பங்குச் சந்தை குறியீடான, நிப்டி, 4 சதவீதம் குறைந்து, வியாபாரமாகியது. இந்த ஆண்டின் தொடர் மாத உயர்வுக்குப் பின், செப்டம்பர் கடைசி இரு வாரங்களும், சந்தை, சரிவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்வதும், உள்நாட்டு முதலீட்டாளர்கள், சந்தையில் கொள்முதல் செய்வதுமான போக்கும் நிலவுகிறது. உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, நம் உள்நாட்டு முதலீட்டு திறன் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே, சந்தையில் ஒரு பிரதான சப்போர்ட்டாக உள்ளது.
இன்று சந்தைக்கு விடுமுறை நாளாகும். மேலும், ஆசிய பங்குச் சந்தைகளும் இந்த வாரத்தில் சில நாட்கள், விடுமுறை காரணமாக இயங்காது.இந்த வாரத்தைப் பொறுத்தவரை, சந்தையின் போக்கு, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடைபெற உள்ள, ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டம் மற்றும் புதன் அன்று வெளிவர உள்ள வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு ஆகியவற்றின் தாக்கத்தை பொறுத்து இருக்கும்.
தொடர் பணவீக்க உயர்வு, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதமும் பணவீக்கம் உயரும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, உயர்ந்து வரும் நிதி பற்றாக்குறை, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு என, பல காரணிகள் சந்தையில் நிலவுகின்றன. வட்டி விகிதம் குறைக்கப்படாது என்ற கருத்தும் ஒரு தரப்பில் நிலவுகிறது.
பருவ மழை தற்போது சராசரியை விட, 6 சதவீதத்துக்கும் குறைவாகும். ரிசர்வ் வங்கியின்,ரெப்போ ரேட், 7 ஆண்டு குறைவாகும். இருப்பினும், வங்கி கடன் வட்டி விகிதம், 10 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது.
கடந்த நிதி கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, இந்திய பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதம் இருக்கும் என அறிவித்தது. ஆனால், தற்போது உலகின் மிகப் பெரிய நிதி நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, 6.75 முதல், 6.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என தெரிவித்துள்ளது. எனவே, வெளிவர இருக்கும் வளர்ச்சி விகித அறிவிப்பும் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
செப்டம்பர் மாத, வாகன விற்பனை விபரம் இந்த வாரம் வெளிவர உள்ளது. இதில் கார் விற்பனை அதிகரித்தும், இருசக்கர வாகனங்கள் விற்பனை உயர்ந்தும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.கனரக வாகன விற்பனை, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை விட குறைவாக இருக்கும். இதில், அசோக் லேலாண்டு மட்டும் அதிகரிக்கக்கூடும். மேலும் நாளை, பி.எம்.ஐ., காரணி வெளிவர உள்ளது. அது, 51.9 ஆக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.வரும் நாட்களில், நிப்டியின் ரெசிஸ்டன்ஸ், 9,960 மற்றும், 10,035 ஆகும். சந்தையின் பிரதான சப்போர்ட், ஆகஸ்ட் 11 குறைவு ஆன, 9,685 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்
டிவிஸ் லேப், ஸ்பார்க், விகார்டு, எபிக் இண்டஸ்ட்ரீஸ், ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி(எச்.எஸ்.சி.எல்.)
-முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|