பதிவு செய்த நாள்
07 அக்2017
00:08
மும்பை : பவுண்டு உள்ளிட்ட, அன்னிய செலாவணிக்கு எதிரான, ரூபாய் மதிப்பு உயர்வால், தோல் காலணி ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்து, அதிகளவில், தோல் காலணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் விலக உள்ளதால், அந்நாட்டின் கரன்சியான, பவுண்டு மதிப்பு குறைந்து வருகிறது. இதனால், அந்நாட்டுக்கு தோல் காலணிகளை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இத்துடன், இறைச்சி மாடுகள் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, மூலப்பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால், தொடர்ந்து, இரு நிதியாண்டுகளாக, தோல் காலணி ஏற்றுமதி, முறையே, 9 மற்றும் 5 சதவீதம் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால், தோல் ஏற்றுமதி வெகுவாக குறையும் அபாயம் உள்ளது. அதே சமயம், உள்நாட்டில் வர்த்தகம் புரியும், தோல் காலணி நிறுவனங்கள் வளர்ச்சி கண்டுள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|