பதிவு செய்த நாள்
02 நவ2017
03:35
பெங்களூரு : சர்வதேச அளவில், இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான, டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம், தேநீர் சில்லரை விற்பனை கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் பிராந்திய தலைவர், சுஷாந்த் தேஷ் கூறியதாவது:நிறுவனம், முதன்முறையாக, சில்லரை விற்பனை பிரிவில் களமிறங்க உள்ளது. இதன்படி முதற்கட்டமாக, கர்நாடக மாநிலம், பெங்களூரில், ‘டாடா சா’ எனும் பெயரில், நான்கு சில்லரை விற்பனை கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளோம். அடுத்த மூன்று மாதங்களுக்குள், இந்த கடைகள் செயல்பாட்டுக்கு வரும்.இதற்கு, பொதுமக்களிடம்இருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முடிவு செய்யப்படும். தேநீர் சில்லரை விற்பனை பிரிவின், அதிவேக வளர்ச்சி மற்றும் 70 சதவீத மக்கள், தேநீரை கடைகளில் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளதால், இந்த பிரிவில் களமிறங்கி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.டாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம், ஏற்கனவே, அதன், ‘மொபைல் போன் ஆப்’பில், தேநீரை, ‘டெலிவரி’ செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|