பதிவு செய்த நாள்
12 நவ2017
03:21
புதுடில்லி, நவ. 12–‘சோப்பு, ஷாம்பூ, வாஷிங் பவுடர் உட்பட, 210 பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விற்பனை விலை குறைக்கப்படும்’ என, நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.ஜி.எஸ்.டி., கவுன்சில், நேற்று முன்தினம், 210 பொருட்களுக்கான, ஜி.எஸ்.டி.,யை குறைப்பதாக அறிவித்தது.அவற்றில், ஷாம்பூ, டிடர்ஜன்ட், சாக்லேட், சுவிங்கம், அழகு சாதனங்கள், கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட, 178 பொருட்களுக்கான வரி, 28லிருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அனைத்து உணவகங்களுக்கும், 5 சதவீதம் என, ஒரே சீரான வரி விதிக்கப்பட்டு உள்ளது. புதிய வரி விகிதம், 15 முதல் அமலுக்கு வருகிறது.இந்நிலையில், வரி குறைந்து உள்ளதால், நுகர்பொருட்கள் விலையை குறைக்க உள்ளதாக, பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன.பதஞ்சலிபதஞ்சலி ஆயுர்வேதா புராடெக்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரவேற்கத்தக்க இந்த முடிவால், அடித்தட்டு மக்கள் பயனடைவர். சோப்பு, டிடர்ஜென்ட், பற்பசை, ஷாம்பூ ஆகியவை, ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி, அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன. இப்பொருட்களின் வரி குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றின் விற்பனை விலை குறைக்கப்படும்’ என, கூறப்பட்டுள்ளது.ஹிந்துஸ்தான் யூனிலிவர்பற்பசை முதல், அழகு சாதனங்கள் வரை, அன்றாட பயன்பாட்டு பொருட்களை விற்பனை செய்யும், ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டு உள்ளதால், நுகர்வோர் பெரிதும் பயனடைவர்.‘வரி குறைப்பால் கிடைக்கும் ஆதாயத்தை, விற்பனை கடைகள் முதல் நுகர்வோர் வரை வழங்க, நிறுவனம் முடிவு செய்துள்ளது’ என்றார்.மாரிக்கோகுக்கர், ஸ்டவ், டியோடரன்ட், பிளேடு, வாஷிங் பவுடர், சமையலறை சாதனங்கள், வாட்டர் ஹீட்டர், பேட்டரி உள்ளிட்ட, பல்வேறு பொருட்களுக்கான வரி, 28லிருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.‘‘இதனால், இப்பொருட்களின் விலை குறையும்; மக்களின் நுகர்வும் அதிகரிக்கும்,’’ என, மாரிக்கோ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி, விவேக் கர்வே தெரிவித்து உள்ளார்.ஜூலையில், ஜி.எஸ்.டி., அறிமுகமான பின், மாரிக்கோ நிறுவனம், ‘பாராசூட்’ உள்ளிட்ட, கேச பராமரிப்பு எண்ணெய் வகைகள் விலையை, 5 சதவீதம் குறைத்துள்ளது. அது போல, சபோலா சமையல் எண்ணெய் விலையும், 3-4 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது என, அவர் மேலும் கூறினார்.மாண்டலிஸ் இந்தியா‘கேட்பரி டெய்ரி மில்க், ஸ்னிக்கர்ஸ், ஓரியோ பிஸ்கட்’ உட்பட, பல்வேறு உணவுப் பொருட்களை, மாண்டலிஸ் இந்தியா நிறுவனம் விற்பனை செய்கிறது.இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘எங்கள் தயாரிப்புகளை, குழந்தைகள் முதல், முதியோர் வரை அதிகமானோர் பயன்படுத்து கின்றனர்.‘ஜி.எஸ்.டி., குறைப்பால் கிடைக்கும் பயன்களை, நுகர்வோருக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். அதனால், எங்கள் தயாரிப்பு பொருட்களின் விலையை குறைக்க, முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|