பதிவு செய்த நாள்
26 நவ2017
03:26
மிக பிரமாண்டமான தொழில்நுட்பத்துடன்வடிவமைக்கப்பட்டுள்ள, ஜி.எஸ்.டி., திட்டத்தின் பயன் என்ன?ஜி.எஸ்.டி., திட்டத்தின்படி, ஒரு பொருள் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து, கடைசியில் யார் வாங்கினர் என்பது வரை, அத்தனை விபரங்களையும், சங்கிலி தொடர் போல் கணிப்பொறி பதிவு செய்து விடும். எங்காவது ஒரு தவறு நடந்தால் கூட, அது, எந்த இடத்தில் நடந்திருக்கிறது என்பதை, கணிப்பொறி காட்டிக் கொடுத்து விடும்.இனி, வரி முறைகேடுகள் தொடர்பாக, பொறி வைத்து யாரையும் பிடிக்க வேண்டிய அவசியம், அதிகாரிகளுக்கு இல்லை. வியாபாரிகளும், வர்த்தகத்தை மறைக்க முயற்சிக்கவோ, அதற்கு அதிகாரிகள் துணை போகவோ முடியாது.ஜி.எஸ்.டி., எதற்கு என்பதற்கு, அரசு முன்வைக்கும் காரணங்கள்1. ‘ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை; ஒரே விலை’ என்ற நடைமுறையை கொண்டு வர2. வரி மேல் வரி விதிக்கப்படுவதை தவிர்க்க3. இந்தியாவில், மத்திய அரசு வரி விதிகள் மற்றும் ஒவ்வொரு மாநில அரசுக்கும் தனி வரி விதிகள் என, பல சட்டங்கள் இருக்கின்றன. அவற்றை ஒருங்கிணைத்து, ஒரே சட்டமாகக் கொண்டு வர4. இதுவரை, சட்டத்தில் இருந்த ஓட்டைகளை பயன்படுத்தி, வர்த்தகத்தை முறையாக பதிவு செய்யாமல், மிகக் குறைந்த வருமானமே வருவதாக பொய் கணக்கு காட்டி, வரி செலுத்தாமல் இருப்போரை, வரி செலுத்த வைக்க5. ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து, எங்கெல்லாம் சப்ளையாகி, யார் இறுதியாக வாடிக்கையாளரிடம் விற்றார் என்பது வரையான, முழு வணிக பயணத்தையும் (Audit Trial) கணிணிமயமாக்க.28 சதவீத வரி விதிப்பிற்கு உட்பட்ட, பொருட்களின் எண்ணிக்கை எவ்வளவு?நவ., 15ல், 178 பொருட்களுக்கான வரி, 28லிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 50 பொருட்களுக்கு மட்டுமே, 28 சதவீத வரி உள்ளது.வரி குறைப்பால், பொருட்கள் விலை குறையுமா?கண்டிப்பாக குறையும். உதாரணமாக, ஒயர், பர்னிச்சர், மெத்தை, சூட்கேஸ், சலவைத் துாள், ஷாம்பூ, மின் விசிறி, விளக்கு, ரப்பர் டியூப், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நீரிழிவு நோயாளிகளின் உணவு, மருத்துவ ஆக்சிஜன், மூக்கு கண்ணாடி, தொப்பி, உருளைக்கிழங்கு பவுடர் உள்ளிட்ட, பல பொருட்களின் விலை குறைந்துள்ளது.விலை குறைப்பு பலனை, நுகர்வோர் முழுமையாக பெறுவதற்கு, என்ன வழிமுறை செய்யப்பட்டு உள்ளது?வரி குறைப்புக்கு பின், விலை குறைக்கப்பட்ட பொருட்களின் விற்பனையை கண்காணிக்க, என்.ஏ.ஏ., எனப்படும், அதிக லாப தடுப்பு ஆணையம் அமைக்க, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. விலை குறைப்பு பலனை, நுகர்வோர் முழுமையாக பெறுவதற்கு, இந்த ஆணையம் உதவும்.ஜி.எஸ்.டி., குறித்து புகார் அளிக்க, ஏதேனும் வழி உள்ளதா? எங்கு அளிக்கலாம்?நிதி அமைச்சகத்துக்கு உரிய ஆதாரங்களுடன், புகார்களை அனுப்பலாம். www.cbecmitra.helpdesk@icegate.gov.in; www.gstn.org வலைதளங்கள் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். மத்திய அரசின் உதவி மையத்தை, 1800 1200 232 என்ற எண்ணில் அணுகலாம்; மாநில அரசின் உதவி மையங்களை, 0120 488 8999, 1800 103 6751ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். ஜி.எஸ்.டி., கவுன்சில் இணையதளத்திலும், புகார் தெரிவிக்கும் வசதி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|