பதிவு செய்த நாள்
28 நவ2017
00:05
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, மெகான் நிறுவனம், மத்திய உருக்கு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனம், பொறியியல், ஆலோசனை திட்ட வடிவமைப்பு உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அதுல் பட் கூறியதாவது: நிறுவனம், 2015 – 16ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், 80 கோடி இழப்பை கண்டிருந்தது. நான், 2016 அக்டோபரில், நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற பின், அவசியமற்ற செலவுகளை குறைத்து, லாபம் ஈட்டக்கூடிய பிரிவுகளில் கவனம் செலுத்தினேன். இதனால், 201௬ – 1௭ம் நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், நிறுவனத்தின் இழப்பு, 5 கோடி ரூபாயாக குறைந்தது.
இதே காலத்தில், விற்றுமுதல், இரு மடங்கு அதிகரித்து, 90 கோடி ரூபாயில் இருந்து, 250 கோடி ரூபாயாக உயர்ந்தது.நடப்பு நிதியாண்டில், நிறுவனத்தின் லாபம் மேலும் உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதனால், அடுத்த ஆண்டு, புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|